தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாருங்கள்…! வாழ்த்துங்கள்…!! பிரசன்னா-சினேகா ஒருசேர அழைப்பு

Go down

வாருங்கள்…! வாழ்த்துங்கள்…!! பிரசன்னா-சினேகா ஒருசேர அழைப்பு Empty வாருங்கள்…! வாழ்த்துங்கள்…!! பிரசன்னா-சினேகா ஒருசேர அழைப்பு

Post  ishwarya Wed Apr 03, 2013 6:23 pm

வாருங்கள்…! வாழ்த்துங்கள்…!! பிரசன்னா-சினேகா ஒருசேர அழைப்பு NT_120430174328000000-e1335807001524தங்களது
திருமணத்திற்கு அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தும்படி, சென்னையில்
பத்திரிக்கையாளர்களை சந்தித்து அழைப்பு விடுத்தனர் பிரசன்னா-சினேகா ஜோடி.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது நட்பாக பழக ஆரம்பித்த நடிகர்
பிரசன்னாவும், சினேகாவும் பின்னர் காதலிக்க தொடங்கினர். இருவரும் தங்களது
காதலை ரகசியமாக வைத்திருந்த நிலையில், சமீபத்தில் அந்த காதலை போட்டு
உடைத்தார் பிரசன்னா. அதன்படி இவர்களது காதல், இப்போது திருமணத்தில்
முடிந்து இருக்கிறது. இவர்களது திருமணம் மே 11ம் தேதி ந‌டைபெற இருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சினேகா-பிரசன்னா
தங்களது திருமணத்திற்கான அழைப்பிதழை, பத்திரிக்கையாளர்களின் இருக்கைக்கே
வந்து கொடுத்து தங்களது திருமணத்தில் பங்கேற்கும்படி ஒவ்வொருத்தருக்கும்
தனித்தனியாக அழைப்பு விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சினேகா-பிரசன்னா கூறியதாவது, வருகிற
11ம் தேதி எங்களது திருமணம் நடக்கிறது. எனக்கு மாமனார்-மாமியார் எப்படி
இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே பிரசன்னாவின் பெற்றோர்
இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் ஆறு மாத காலம் தனிக்குடித்தனம்
இருக்கிறோம். பின்னர் அனைவரும் ‌ஒரே குடும்பத்தில் சேர்ந்து வாழ உள்ளோம்.
திருமணத்திற்கு பிறகு நடிக்கலாமா? வேண்டாமா? என்று இன்னும் முடிவு
செய்யவில்லை. அனைவரும் திருமணத்திற்கு வந்து எங்களை வாழ்த்தும் படி
கேட்டுகொள்கிறோம் என்று சினேகா கூறினார்.

பிரசன்னா கூறுகையில், எங்களது காதல் வளர்ந்ததே செல்போன் மூலமாகத்தான்.
சி.யூ.ஜி என்ற ஒரு திட்டம் இருந்ததால் தான் தங்களது காதல் இந்தளவுக்கு
வளர்ந்ததாகவும், அப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திய செல்போன்
நிறுவனங்களுக்கு ‌ரொம்ப நின்றி என்றார். மேலும் அவர் கூறுகையில், நானும்,
சினேகாவும் வேறு வேறு பிரிவு என்பதால் இருவீட்டாரின் சந்தோஷத்திற்காக எங்க
வீட்டு முறைப்படியும், அவர் வீட்டு முறைப்படியும் திருமணம் நடக்கிறது.
இதனால் சினேகா கழுத்தில் நான் இரண்டு முறை தாலி கட்டுகிறேன். நான் சினேகாவை
திருமணம் செய்ய போகிறேன் என்றதும் பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதேசமயம் ட்விட்டர் வலைதளத்தில் சிலர் புன்னகை அரசியையா கல்யாணம் செய்ய
போகிறாய் என்று மிரட்டினர். ஆனால் அந்த மிரட்டலை நான் புன்னகையோடு
வரவேற்கிறேன். திருமணத்திற்கு பிறகும் சினேகாவை புன்னகை அரசியாகவே பார்த்து
கொள்வேன். திருமணத்திற்கு பிறகு சினேகா நடிப்பது பற்றி இன்னும் முடிவு
செய்யவில்லை. அது அவர் விருப்பம் எல்லோரும் எங்களது திருமணத்தில் தவறாமல்
கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

சினேகா-பிரசன்னா திருமணம் சென்னை வாணகரத்தில் உள்ள ஸ்ரீவாரு
வெங்கடாஜலபதி பேலஸில் வருகிற 11ம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னதாக 10ம்
தேதி இரவு திருமண வரவேற்பு நடக்கிறது. திருமணத்திற்கான அழைப்பிதழ் ஊதா
நிறத்திலும் அதில் உள்ள எழுத்து கோல்டன் கலரிலும் அச்சிடப்பட்டு உள்ளது.
திருமண அழைப்பிதழின் மேல்-உறையில் பி(பிரசன்னா) அண்ட் எஸ்(சினேகா) என்று
சிம்பாலிக்காக அச்சிடப்பட்டு இருக்கிறது. திருமண பத்திரிக்கையை ரொம்ப
வித்தியாசமாக ஊதா கலரில் அச்சிட்டுள்ளனர் சினேகா-பிரசன்னா ஜோடி. ஊதா நிறம்
மீது அப்படியென்ன மோகமோ சினேகா-பிரசன்னாவுக்கு…!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum