தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏர்போட்டில் 40 நிமிடம் தவித்த நயன்தாரா!

Go down

 ஏர்போட்டில் 40 நிமிடம் தவித்த நயன்தாரா! Empty ஏர்போட்டில் 40 நிமிடம் தவித்த நயன்தாரா!

Post  ishwarya Wed Apr 03, 2013 5:20 pm

சென்னை ஏர்போட்டில் சுங்க இலாகா அதிகாரிகள் சுமார் 40 நிமிடங்கள் விசாரனை நடத்தியதால், நடிகை நயன்தாரா தவிப்புக்குள்ளானார். பிரபுதேவாவுடனான பிரிவுக்குப் பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நயன்தாரா, இரண்டு புதிய தெலுங்கு படங்களிலும், அஜித் ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் பட வேலை தொடர்பாக கேரளாவில் இருந்து சென்னை வந்த நயன்தாரா, பின்னர் தனது மேலாளர் ராஜேஷ், மேக்கப் மேன் ராஜு ஆகியோருடன் விமானம் மூலம் பாங்காக் சென்றார். பாங்காக்கில் இருந்து மீண்டும் சென்னை திரும்பிய நயன்தாராவிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவருடைய மேலாளர் ராஜேஷிடம் இன்னொரு அறையில் தனியாக விசாரணை நடந்தது. இரண்டு பேரின் சூட்கேஸ்களையும் அதிகாரிகள் சோதனை போட்டார்கள். இந்த விசாரணை மற்றும் சோதனை சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. சுங்க அதிகாரிகளின் திடீர் சோதனை காரணமாக நயன்தாரா தவிப்புக்குள்ளானார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum