தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: 3 பேர் பலி

Go down

ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: 3 பேர் பலி Empty ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: 3 பேர் பலி

Post  meenu Mon Apr 01, 2013 2:36 pm

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகேயுள்ள அப்பியம் பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 28). பால் வியாபாரி இவருக்கு சொந்தமாக மினி லாரி உள்ளது. தனது மனைவி மலர்மதி (25), மகள் அனுஷ்யா (2) ஆகியோருடன் ஒட்டன் சத்திரத்துக்கு சென்று விட்டு அப்பியம்பட்டிக்கு வேனில் புறப்பட்டார்.

அப்போது ஒட்டன்சத் திரத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற தொப்பக் காவலசு கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (17), சந்தோஷ் (17), செல்வி (26), மோனிகா (13) ஆகியோரையும் ஏற்றிக் கொண்டு அப்பியம் பட்டிக்கு முத்துவேல் வந்து கொண்டு இருந்தார். இவர்கள் வந்த வேன் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மாபட்டி வாய்க்கால்பாலம் அருகே சென்று கொண்டு இருந்தது.

அப்போது தாராபுரத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த அரசு பஸ், வேன் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. வேனின் முன்பகுதியில் இருந்த முத்துவேல், இவரது மனைவி மலர்மதி, மகள் அனுஷ்யா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

வேனில் பின்பகுதியில் இருந்த நாகராஜ் உள்பட 4 பேரும், பஸ் டிரைவர் கனகராஜ், கண்டக்டர் ராஜசேகர் ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்த 6 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து ஒட்டன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக ஒட்டன் சத்திரம்தாராபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum