தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

6 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டை கண்டித்து சென்னையில் இன்று மாலை விஜயகாந்த் பேசுகிறார்

Go down

6 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டை கண்டித்து சென்னையில் இன்று மாலை விஜயகாந்த் பேசுகிறார் Empty 6 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டை கண்டித்து சென்னையில் இன்று மாலை விஜயகாந்த் பேசுகிறார்

Post  meenu Mon Apr 01, 2013 2:31 pm


தே.மு.தி.க. தலைமை கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தே.மு.தி.க.வை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு வருட காலத்திற்கு அவை நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தையும், எந்த விதமான பிற ஆதாயங்களையும், சலுகைகளையும், தகுதிகளையும் பெறக் கூடாது என்று சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இது போன்ற தண்டனையை சட்டமன்ற வரலாற்றில் வழங்கப்படவில்லை என்று கண்டனக் குரல் எழுப்பியதன் விளைவாக 6 மாதமாக அந்த தண்டனையை மாற்றியமைத்து சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பொதுக் கூட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை பேசினாலே அவதூறு வழக்குகள் போடப்பட்டு வருகிறது. சட்டமன்றத்திலும் மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு தடை விதிக்கும் வகையிலே இந்த 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்டில் இன்று மாலை 5 மணிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர், 6 மாத காலம் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து உரையாற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இடைநீக்கம் செய்யப்பட்ட விருகம்பாக்கம் பார்த்தசாரதி, எழும்பூர் நல்ல தம்பி உள்ளிட்ட 6 பேரும் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும், மாவட்டம், பகுதி, வட்டம், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம். காமராஜ், மத்திய சென்னை மாவட்ட கழக செயலாளர் செந்தாமரைக் கண்ணன், தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் வி.என். ராஜன், வடசென்னை மாவட்ட கழக செயலாளர் யுவராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கோர்ட்டில் இன்று விஜயகாந்த் ஆஜராகவில்லை
» முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கோர்ட்டில் இன்று விஜயகாந்த் ஆஜராகவில்லை
» முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கோர்ட்டில் இன்று விஜயகாந்த் ஆஜராகவில்லை
» மகர ஜோதி : இன்று மாலை சபரிமலை நடை திறப்பு
» மகர ஜோதி : இன்று மாலை சபரிமலை நடை திறப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum