தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவகாசிக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான மருந்துகள்: தமிழர்களை கவர்ந்த மம்முட்டி

Go down

சிவகாசிக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான மருந்துகள்: தமிழர்களை கவர்ந்த மம்முட்டி Empty சிவகாசிக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான மருந்துகள்: தமிழர்களை கவர்ந்த மம்முட்டி

Post  ishwarya Mon Apr 01, 2013 1:05 pm

சிவகாசி பட்டாசு விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருந்து பொருட்கள் அனுப்பி தமிழர்களை நடிகர் மம்முட்டி கவர்ந்துள்ளார். இந்த விபத்தில் 39 தொழிலாளர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு தீப்புண்ணை ஆற்றும் ஆயுர்வேத மருந்துகளை மம்முட்டி அனுப்பி வைத்தார்.

அவரது உதவியாளர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சிகிச்சை பெறுவோரிடம் அளித்தனர். இந்த மருந்து பொருட்களின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். இவற்றை நன்கொடையாக வழங்கினார்.

தமிழ் நடிகர்கள் எவரும் செய்யாத செயலை மம்முட்டி செய்து இருப்பதற்காக பலரும் அவரை பாராட்டுகின்றனர். மம்முட்டி தமிழில் பல படங்கள் நடித்துள்ளார். அவற்றில் ‘ஆனந்தம்‘, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ‘தளபதி’, ‘அழகன்’ போன்றவை முக்கியமானவை ஆகும்.

மம்முட்டி மகன் துல்கர் சல்மானும் மலையாள படங்களில் நடிக்கிறார். விரைவில் தமிழ் படங்களிலும் அவரை கதாநாயகனாக அறிமுகபடுத்த திட்டமிட்டு உள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum