சென்னையில் சூரிய கோவில்
Page 1 of 1
சென்னையில் சூரிய கோவில்
சென்னை வண்டலூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொளப்பாக்கத்தில் சூரியனுக்கு என்ற சிறப்புத்தலம் உள்ளது. இது சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுகிறது. போரூரில் இருந்து மியாத் மருத்துவமனை எதிரே செல்லும் சாலை வழியாக, கெருகம்பாக்கம் சென்றால் கொளப்பாக்கத்தை எளிதில் சென்று சேரலாம்.
அங்கு ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம் சிறப்பாக உள்ளது. இத்தலத்தில் மூலவராக அகத்தீஸ்வர சுவாமி உள்ளார். இறைவி பெயர் பெரியநாயகி அம்பிகை. இது 1300 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் சிவபெருமானை பார்த்தப்படி மேற்கு நோக்கிய திசையில் சூரியன் உள்ளார்.
தனி சன்னதியில் உள்ள சூரியன், இங்கு சிவனை வணங்குவதாக ஐதீகம். இங்கு சூரிய பகவானுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதை உணர்த்தும் வகையில் இத்தலத்தில் உள்ள அனைத்து கடவுள்களும் சூரியனை நோக்கியே உள்ளன. சூரியனுக்கு உகந்த நிறமான சிவப்பு வஸ்திரம் சார்த்தி இங்கு வழிபடுகிறார்கள்.
கோதுமை பொருட்கள் நைவேத்தியமாப படைக்கப்படுகிறது. இங்கு வழிபாடுகள் செய்ய ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாளாகும். இத்தலத்தில் சூரியனை வழிபட்டால் நினைத்தது நடக்கும். உடலில் தேஜஸ் உண்டாகும். அகத்திய முனிவர் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ததால், இறைவன் அகத்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
ராஜகணபதி, காசி விசுவநாதர், சுப்பிரமணியர், தனி சன்னதிகளில் உள்ளனர். சுப்பிரமணியர் தலத்தில் உள்ள மயில் மரகதக் கல்லால் (பச்சை) உருவாக்கப்பட்டதாகும். இங்குள்ள கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். ஞாயிறு தோறும் ராகுகாலத்தில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
6 வாரம் தொடர்ந்து பைரவரை வணங்கினால் நினைத்தது நடக்கும். ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், வீரராஜேந்திர சோழன் உள்பட பல அரசர்கள் இங்கு திருப்பணி செய்துள்ளனர். சுமத்ராதீவு மன்னன் இங்கு வழிபட்டு சூரிய தோஷத்தை நிவர்த்தி செய்ததாக கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சமீப காலமாகத்தான் சென்னையில் உள்ள இந்த சூரிய தலம் பக்தர்களிடம் பிரபலமாகி வருகிறது. சூரியனார் கோவிலுக்கு இணையான தலம் என்பதால் அங்கு செல்ல இயலாதவர்கள் இத்தலத்திலேயே பரிகார பூஜைகளை செய்யலாம்.
அங்கு ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம் சிறப்பாக உள்ளது. இத்தலத்தில் மூலவராக அகத்தீஸ்வர சுவாமி உள்ளார். இறைவி பெயர் பெரியநாயகி அம்பிகை. இது 1300 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் சிவபெருமானை பார்த்தப்படி மேற்கு நோக்கிய திசையில் சூரியன் உள்ளார்.
தனி சன்னதியில் உள்ள சூரியன், இங்கு சிவனை வணங்குவதாக ஐதீகம். இங்கு சூரிய பகவானுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதை உணர்த்தும் வகையில் இத்தலத்தில் உள்ள அனைத்து கடவுள்களும் சூரியனை நோக்கியே உள்ளன. சூரியனுக்கு உகந்த நிறமான சிவப்பு வஸ்திரம் சார்த்தி இங்கு வழிபடுகிறார்கள்.
கோதுமை பொருட்கள் நைவேத்தியமாப படைக்கப்படுகிறது. இங்கு வழிபாடுகள் செய்ய ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாளாகும். இத்தலத்தில் சூரியனை வழிபட்டால் நினைத்தது நடக்கும். உடலில் தேஜஸ் உண்டாகும். அகத்திய முனிவர் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ததால், இறைவன் அகத்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
ராஜகணபதி, காசி விசுவநாதர், சுப்பிரமணியர், தனி சன்னதிகளில் உள்ளனர். சுப்பிரமணியர் தலத்தில் உள்ள மயில் மரகதக் கல்லால் (பச்சை) உருவாக்கப்பட்டதாகும். இங்குள்ள கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். ஞாயிறு தோறும் ராகுகாலத்தில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
6 வாரம் தொடர்ந்து பைரவரை வணங்கினால் நினைத்தது நடக்கும். ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், வீரராஜேந்திர சோழன் உள்பட பல அரசர்கள் இங்கு திருப்பணி செய்துள்ளனர். சுமத்ராதீவு மன்னன் இங்கு வழிபட்டு சூரிய தோஷத்தை நிவர்த்தி செய்ததாக கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சமீப காலமாகத்தான் சென்னையில் உள்ள இந்த சூரிய தலம் பக்தர்களிடம் பிரபலமாகி வருகிறது. சூரியனார் கோவிலுக்கு இணையான தலம் என்பதால் அங்கு செல்ல இயலாதவர்கள் இத்தலத்திலேயே பரிகார பூஜைகளை செய்யலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சென்னையில் சூரிய கோவில்
» மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
» சூரிய நமஸ்காரம்
» சூரிய வழிபாடு
» சூரிய நமஸ்காரம்
» மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
» சூரிய நமஸ்காரம்
» சூரிய வழிபாடு
» சூரிய நமஸ்காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum