தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில்

Go down

கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில் Empty கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில்

Post  birundha Sun Mar 31, 2013 3:01 pm

ஸ்தல வரலாறு.....

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசூழ்ந்தமங்கலம் வெங்கடாசலபதி கோவிலில் சக்கரத்தாழ்வார் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார். தசாவதாரங்களில் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆகியவற்றின் குணங்களை ஒருங்கே பெற்றவர் சக்கரத்தாழ்வார். திருமால் இவரிடம் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அளிக்கும் உரிமையை தந்துள்ளார்.

இந்திரதுய்மன் என்பவன் யானையாக பிறந்த போது கூகு என்பவன் முதலையாக பிறந்தான். யானையின் காலை முதலை கவ்விய போது சக்கரத்தாழ்வாரை அனுப்பியே திருமால் முதலையை வதைத்தார். வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை எல்லாம் தரும் சுதர்சன பெருமான் நல்வழியை காட்டுபவர். எதிரிகளை விலகச் செய்பவர்.

புத்தி, சாமர்த்தியம், வெற்றி இவைகளை அளிக்க தயங்காதவர். இவரை வழிபட்டால் குடும்ப ஒற்றுமையும், பக்திப்பெருக்கும் ததும்பும், பிறரின் அதிகாரத்திற்கு உட்படாமல் தன் சக்தியின் மூலம் ஏற்பட்ட பகவானின் சங்கல்பம் இத்தலத்தில் சதர்சனமாக விளங்குவதால் இவரை வழிபடுபவர்களுக்கு எந்தத் தடையும் வராது.

அவர் கையிலுள்ள ஆயுதங்கள் விழிப்புடன் இருந்து பக்தர்களைக் காப்பாற்றுகின்றன. சக்கரத்தாழ்வாராகிய சுதர்சன மூர்த்தி சுக்கிரனுக்கு அதிபதி. இக்கோயில் சுதர்சன பெருமாள் சுக்கிரன் பரிகார ஸ்தலமாக விளங்குகிறார். எனவே சுக்கிர தோஷ நிவர்த்திக்கு இங்கு பரிகார பூஜை செய்து பலனடையலாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum