தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பதி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு

Go down

 திருப்பதி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு Empty திருப்பதி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு

Post  amma Fri Jan 11, 2013 1:30 pm

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம்
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவு பெற்றது. உற்சவம் நடந்த 8
நாட்களில் பக்தர்கள் ரூ.12.93 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம்
கடந்த
15-ம் தேதி தொடங்கியது. 9-ம் நாளான நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி
தாயாருடன் மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வாருடன் வராக சுவாமி கோயிலுக்கு
எடுத்துச் செல்லப்பட்டு, ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சனம்
நடந்தது. பின்னர் ஏழுமலையான் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
நடந்தது.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
இதையடுத்து நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. விழாவில் ஆந்திர
டிஜிபி தினேஷ்ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜூ, செயல் அலுவலர்
சுப்பிரமணியம், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்களிடம்
செயல் அலுவலர் சுப்பிரமணியம் கூறியதாவது: பிரம்மோற்சவம் நடந்த 8 நாட்களில்
4 லட்சத்து 74 ஆயிரத்து 888 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியல்
காணிக்கை மட்டும் ரூ.12.93 கோடி. பிரசாதம் மற்றும் ஆர்ஜித டிக்கெட் விற்பனை
மூலம் ரூ.2.92 கோடி கிடைத்துள்ளது.

17 லட்சத்து 20 ஆயிரத்து 542
லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 3 லட்சத்து 60 ஆயிரத்து 500 பேருக்கு
சிறிய லட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 34 ஆயிரத்து 758 பேர் முடி
காணிக்கை செலுத்தினர். 15 லட்சத்து 23 ஆயிரத்து 758 பேருக்கு இலவசமாக உணவு
வழங்கப்பட்டுள்ளது. திருமலையை சுற்றி 52 இடங்களில் எல்இடி விளக்குகளுடன்
கூடிய அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் 15 சதவீதம் மின்சாரம்
சேமிக்கப்பட்டது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum