தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுதர்சன கவசம்

Go down

சுதர்சன கவசம் Empty சுதர்சன கவசம்

Post  meenu Thu Mar 28, 2013 5:14 pm


ஸ்ரீசுதர்ஸனர் என் சிரசினை காப்பாற்ற வேண்டும்.
மஹாவிஷ்ணுவின் திருக்கரத்தில் ஜனித்தவர் கீழ்ப் பக்கத்தில் காப்பாற்ற வேண்டும்.
சுத்த வீரர் தென் பக்கத்தில் காப்பாற்ற வேண்டும்.
பரிசுத்தர் மேற்குப் பக்கத்தில் காப்பாற்ற வேண்டும்.
பரதனாக வந்தவர் வடக்குப் பக்கத்தில் காப்பாற்ற வேண்டும்.
தசரதார்மஜர் நெற்றியினைக் காப்பாற்ற வேண்டும்.
சியாமள சகோதரர் புருவங்களை காப்பாற்ற வேண்டும்.
ஜனங்களில் அதிபதி புருவங்களின் மத்திப் பகுதியைக் காப்பற்ற வேண்டும்.
ராஜேந்திரர் காதுகளை காப்பாற்ற வேண்டும்.
ராஜீவ் லோசனர் கண்களைக் காப்பாற்ற வேண்டும்.
ராஜரிஷி மூக்கினைக் காப்பாற்ற வேண்டும்.
ஜனாதிபதி கன்னத்தைக் காப்பாற்ற வேண்டும்
கஜேந்திரனை காத்தவர் காது மூலத்தைக் காப்பாற்ற வேண்டும்.
ராம சகோதரர் நெற்றியினைக் காப்பாற்ற வேண்டும்.
வாக்குக்குப் பதியானவர் நாக்கினைக் காப்பாற்ற வேண்டும்.
தேவர்களில் உத்தமர் பற்களைக் காப்பாற்ற வேண்டும்.
ஸ்ரீசக்கரத்தாழ்வார் உதடுகளைக் காப்பாற்ற வேண்டும்.
பராத்பரர் முகத்தினைக் காப்பாற்ற வேண்டும்.
உலகம் வணங்கி விளங்குகின்றவர் என் கழுத்தினைக் காப்பாற்ற வேண்டும்.
சக்கரம் ஏந்தியவர் தோள்களைக் காக்க வேண்டும்.
ஆயுதங்கள் ஏந்தியர் கைகளை காப்பாற்ற வேண்டும்.
திருமால் பிரியர் விரல்களை காப்பாற்ற வேண்டும்.
அரக்கரின் சத்ரு முன்கைகளைக் காப்பாற்ற வேண்டும்.
சிசுபாலனை வதைத்தவர் மார்பினை காப்பாற்ற வேண்டும்.
அம்பீஷனை காப்பாற்றியவர் ஸ்தனங்களைக் காப்பாற்ற வேண்டும்.
ஜகதீஸ்வரர் பக்கங்களைக் காப்பாற்ற வேண்டும்.
லட்சுமிக்கு பிரியர் இடையினைக் காப்பாற்ற வேண்டும்.
கலியுக வாசுதேவன் எனப் பொய்யுரைத்த வாசுதேவனை வதைத்தவர் நாபியைக் காப்பாற்ற வேண்டும்.
கைகேயியின் குமாரன் இடுப்பினை காப்பாற்ற வேண்டும்.
ஈதிபாதியை நாசப்படுத்துபவர் பின்பக்கங்களைக் காப்பாற்ற வேண்டும். ரிஷிசேகர் இரகசிய ஸ்தானத்தை காப்பாற்ற வேண்டும்.
சத்திய விக்கிரமர் முழங்கால்களைக் காப்பாற்ற வேண்டும்.
சாரங்கனை நண்பராகக் கொண்டவர் தொடைகளை காப்பாற்ற வேண்டும்.
ஆஞ்சநேயரிடம் அன்பு பூண்டவர் முழங்காலுக்கு மேற்புறத்தை காப்பாற்ற வேண்டும்.
உலகம் எங்கும் வியாபித்தவர் கணைக் கால்களைக் காப்பாற்ற வேண்டும். விஷ்ணுப் பிரியர் பாதங்களைக் காப்பாற்ற வேண்டும்.
பாற்கடலில் வசிப்பவர் சர்வாங்கத்தினையும் காப்பாற்ற வேண்டும்.
வியாதிகளற்றவர் சந்திகள் எல்லாவற்றையும் காப்பாற்ற வேண்டும்.
மதுசூதனப் பிரியர் ஞானேந்திரியம், பிராணன் முதலானவற்றை காப்பாற்ற வேண்டும். ஸ்ரீராமச்சந்திர பிரியர் சப்தம் முதலிய விஷயங்களைக் காப்பாற்ற வேண்டும்.
பரசுராமரை விரோதித்தவர் என்னைச் சேர்ந்தவை எல்லாவற்றையும் காப்பாற்ற வேண்டும்.
கொளமொதகியின் நண்பர் சாய் முதலான இந்திரியங்களைக் காப்பாற்ற வேண்டும்.
அம்பரீஷன் உயிரைக் காத்தவர் மயிர்கால்கள் எல்லாவற்றையும் சாந்நித்யமாக இருந்து காப்பாற்ற வேண்டும்.
பரமசிவப் பிரியரும், சக்தியின் அருளை பெற்ற வரும், விநாயகரால் வாய்க்குள் வைத்துக் காப்பாற்றப் பட்டவரும் விரதங்களால், தவங்களால், பகவான் ஸ்ரீஹரி விஷ்ணுவுக்கு மீண்டும் கிடைத்தவரும்.
விஸ்வரூபம் எடுக்கும்போது பதினெட்டுக் கைகளுடன் கூடியவராகப் பேரூருவம் எடுத்தவரும்- சூலம், பாசம், அங்குசம், பரசு, கட்கம், சக்கரம், சங்கு, பானபத்திரம், முஸலம், மழு, கதை, வஸ்ராயுதம், அக்னி, குந்தம், கேடயம், ஹலம் போன்ற இன்னும் பற்பலவிதமான சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும் ஆன அந்த சக்கரத்தாழ்வார் வாக்கு, மனம், புத்தி, அகங்காரம் ஞானம், அக்ஞானம் இவற்றால் ஜன்ம ஜன்மாந்திரங்களில் செய்த அநேக பாவங்களைப் போக்கி எங்கும் எப்போதும் பாதுகாக்க வேண்டுகிறேன்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum