தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காரைக்கால் அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவியிடம் பலாத்காரம்: காவலாளிக்கு சரமாரி அடி

Go down

காரைக்கால் அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவியிடம் பலாத்காரம்: காவலாளிக்கு சரமாரி அடி Empty காரைக்கால் அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவியிடம் பலாத்காரம்: காவலாளிக்கு சரமாரி அடி

Post  meenu Thu Mar 28, 2013 2:36 pm

காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் பக்கிரிசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு காரைக்கால் முருகராமு நகரை சேர்ந்த காளியப்பன் (வயது 41) காவலாளியாக பணியாற்றி வந்தார்.

2 நாட்களுக்கு முன்பு பள்ளி விடுமுறையின் போது பள்ளி விளையாட்டு திடலில் விளையாட வந்த அப்பள்ளியில் 4-ம் வகுப்பு பயிலும் மாணவியை, காளியப்பன் மிட்டாய் தருவதாகக் கூறி பள்ளிக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவர் அந்த மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர் வீட்டில் உள்ளவர்கள் எதேச்சையாக தங்கள் வீட்டு மாடிக்கு செல்லும் போது இதனை பார்த்து அந்த மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் வருவதைக் கண்ட காளியப்பன், அந்த மாணவியிடம் கையில் பத்து ரூபாய் பணத்தை கொடுத்து மிட்டாய் வாங்கிக் கொள், இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லாதே என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் பெற்றோர்களும், கிராமத்தினரும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த காளியப்பனை பெற்றோர்களும், ஊர்மக்களும் சேர்ந்து சுற்றிவளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த காரைக்கால் டவுன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வன் மற்றும் போலீசார் காளியப்பனை போலீஸ் ஜீப்பில் ஏற்றி டவுன் போலீஸ் நிலையத்திற்கு புறப்பட்டனர்.

ஆனால் அவன் மீது கல்வித்துறையில் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அவனை எங்களிடம் விட்டு விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி போலீஸ் ஜீப்பை நகர விடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பின்னர் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீங்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுங்கள், நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினர். நீண்ட நேர முற்றுகைக்கு பின்னர் போலீசார் காளியப்பனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum