தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை

Go down

சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை Empty சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை

Post  meenu Thu Mar 28, 2013 2:25 pm

சேலம் காசகாரனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி (40). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். சூரமங்கலம் ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்து இருக்கிறது. அப்போது சாந்தியின் செல்போன் எண் பாலசுப்ரமணியத்துக்கு கிடைத்தது. அந்த செல்போன் மூலம் பாலசுப்ரமணியம், சாந்திக்கு நியூ இயர் மெசேஜ் அனுப்பி உள்ளார். இதன் மூலம் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது.

பின்னர் சாந்தி தனது நிலையை எடுத்து சொல்லி இருக்கிறார். இதையடுத்து பாலசுப்ரமணியன் திருமணம் செய்யாமலேயே தனி வீடு எடுத்து சாந்தியுடனும் குடும்பம் நடத்தி வந்தார். கடந்த 2 மாதத்துக்கு முன்பு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மெய்யனூர் ஆலமரக்காடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சாந்தியை குடி வைத்தார்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் சாந்தி குடியிருந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்தது. மேலும் லைட் எரிந்து கொண்டு இருந்தது. பேன், டி.வி ஆகியவையும் ஓடிகொண்டு இருந்தது. இன்று காலையும் இதே போல் டி.வி. ஓடிக்கொண்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் கதவை முழுமையாக திறந்து பார்த்தார். அப்போது ஹாலுக்குள் சாந்தி படுத்த நிலையில் கழுத்தை அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது. பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் இதுப்பற்றி தகவல் கிடைத்ததும் சாந்தியுடன் குடும்பம் நடத்தி வந்த பாலசுப்ரமணியமும் அங்கு வந்தார். பின்னர் போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது சாந்தியின் கழுத்து அறுக்கப்பட்டு அருகில் ஒரு கத்தி கிடப்பதும் தெரியவந்தது. சுப்பிரமணி நேற்று மதியம் வரை சாந்தியுடன் செல்போனில் பேசி இருப்பது தெரியவந்தது. எனவே அவர் பேசி முடித்த பின்பு தான் சாந்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவருகிறது.

சாந்திக்கு வேறுயாருடனாவது பழக்கம் இருக்கிறதா? அல்லது என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவருக்கு எங்கிருந்தெல்லாம் போன் வந்தது என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum