தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு கொன்ற ஜப்பான் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைஜப்பானின் மேற்கு ஒசாகா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் சானே நகமுரா (வயது 25). இவருக்கு 3 வயதில் ஒரு மகள் மற்றும் ஒன்றரை வயதில் மகன் இருந்தனர். கணவன் இல்லாமல் தனியாக வாழ்ந

Go down

பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு கொன்ற ஜப்பான் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைஜப்பானின் மேற்கு ஒசாகா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் சானே நகமுரா (வயது 25). இவருக்கு 3 வயதில் ஒரு மகள் மற்றும் ஒன்றரை வயதில் மகன் இருந்தனர். கணவன் இல்லாமல் தனியாக வாழ்ந Empty பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு கொன்ற ஜப்பான் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைஜப்பானின் மேற்கு ஒசாகா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் சானே நகமுரா (வயது 25). இவருக்கு 3 வயதில் ஒரு மகள் மற்றும் ஒன்றரை வயதில் மகன் இருந்தனர். கணவன் இல்லாமல் தனியாக வாழ்ந

Post  meenu Thu Mar 28, 2013 1:21 pm

ஜப்பானின் மேற்கு ஒசாகா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் சானே நகமுரா (வயது 25). இவருக்கு 3 வயதில் ஒரு மகள் மற்றும் ஒன்றரை வயதில் மகன் இருந்தனர். கணவன் இல்லாமல் தனியாக வாழ்ந்த நகமுராவுக்கு ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் குழந்தைகளை தனியாக வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்லத் தொடங்கியிருக்கிறார். பல சமயங்களில் இரவு முழுவதும் அந்த ஆண் நண்பருடன் தங்கிவிட்டு காலையில்தான் வீடு திரும்புவாராம். இதனால் இரவு முழுவதும் இரண்டு குழந்தைகளும் தனியாக வீட்டில் பரிதவித்துள்ளன.

இந்நிலையில், அதே ஆண்டு ஜூன் மாதம் துவக்கத்தில் குழந்தைகளை தனியாக விட்டுச் சென்ற நகமுரா, அந்த மாத கடைசியில்தான் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது, பல நாட்கள் பட்டினியாக கிடந்த குழந்தைகள் இரண்டும் இறந்து கிடந்தன.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகமுராவைக் கைது செய்தனர். வழக்கை விசாரித்த கீழ்கோர்ட், குழந்தைகளுக்கு போதிய உணவு கொடுக்காமல் கொலை செய்த நகமுராவுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து நகமுரா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில், நகமுராவின் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் வயது 45. இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மூத்த மகனுக்கு 21 வயது. மூளை வளர்ச்சி இல்லாமல் படுத்த படுக்கையாகி விட்டான். அரசாங்கப் பணியில் உள்ள என் கணவர் தற்போது என்னை வெறுத்து ஒதுக்குகிறார். என் வாழ்க்கையில் நிம்மதி பிறக்குமா?
» திருச்சி பேட்டரி கடை அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை-பணம் கொள்ளைதிருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் 7-வது கிராசில் ஒரு வீட்டிலும், அதன் அருகில் உள்ள கீதா நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டிலும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் ந
» 45 வயது மைத்துனியிடம் சில்மிஷம்! மறுத்ததால் மிதித்துக் கொன்ற 61 வயது அக்கா புருஷன்!
» இரண்டு குழந்தைகளை அநியாயமாக கொன்ற பாதகனை தூக்கில் போடுங்கள் – நடிகர் விஜய் ஆவேசம்
» ஆசிரிய கள்ளக்காதலி தூண்டுதலால் குழந்தைகளை கொன்ற மதுரை ஆட்டோ ட்ரைவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum