தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்

Go down

வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் Empty வத்தலக்குண்டு காளியம்மன் கோவில்

Post  birundha Thu Mar 28, 2013 12:41 am

ஸ்தல வரலாறு....

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பெரிய குளம்-திண்டுக்கல், பெரிய குளம்-மதுரை செல்லும் மெயின் சாலையில் வட திசை நோக்கி அமைந்துள்ளது கேட்ட வரம் தரும் காளியம்மன் திருக்கோவில். இக்கோயில் பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

அரசியல் பிரமுகர் முதல் அரசு அலுவலர்கள், வியாபாரிகள் அனைவரும் தங்கள் வேண்டுதல்களை கோரிக்கைகளாக அம்மன் முன் வைக்க அதனை நிறைவேற்றித் தருபவள் இக்காளியம்மன்தான். பவுர்ணமி பூஜை, வரலட்சுமி நோன்பு, ஆடிப்பூரம், துர்க்கா பூஜை ஆகிய பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

கோவில் நடை சாற்றிய பின் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக கோவிலின் வெளிப்புறச் சுவற்றில் காளியம்மனின் பெரிய சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மாலை அணிவித்தும், சிலையின் கிழ் விளக்கேற்றியும் வணங்குவர்.

இக்கோவிலின் திருவிழா ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் 4 நாட்கள் நடைபெறும். பூச்சொரிதலுடன் தொடங்கும் இத்திருவிழா ஒவ்வொரு நாளும் வாண வேடிக்கையுடன் நடைபெறும். திருவிழா நாட்களில் அம்மன் பூத்தேர், மின்னொளி அலங்காரத்தேரில் நகர்வலம் வருவாள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum