குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயம்
Page 1 of 1
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயம்
மாயூரத்திற்கு தென்மேற்கே கும்பகோணம் செல்லும் வழிகளில் 9 கி.மீ. தூரமுள்ளது குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயம். சுந்தரர் உடற்பிணி தீர்த்த பதி. சிவபெருமான் பிரம்மச்சாரியாக வேதமோதிய பதியாகும். இங்கு வழிபட உடல்நல கோளாறுகள் நீங்கும்.
வைத்தீஸ்வரன் கோயில்: சீர்காழிக்குத் தென்மேற்கே 5 கி.மீட்டர் தூரத்தில் பிரதான சாலையில் ஸ்ரீவைத்தியநாதஸ்வாதி ஆலயம் உள்ளது. செவ்வாய் கோத்திரம் சிவபெருமான் வைத்திய நாதராய் (நோய் தீர்ப்பவராய்) வந்தவர். புள்-ஜடாயு, இவருக்கு-வேதம், வேல்முருகன் வழிபட்ட தலம். நோய் தீர்க்கும் வல்லமை பெற்ற திருத்தலம். இத்தலத்தின் தலவிருட்சம் உத்தால மரம் என்ற் ஒரு வகை ஆத்தி மரம். ஆலயம் ஊருக்கு நடு நாயகமாக விளங்குகிறது. 5 நிலை இராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. இரண்டு பிரகாரங்கள் கொண்டது.
கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் உள்ளன. வலதுபுறம் ஸ்தல விருட்சமான உத்தால மரமும் அதை சுற்றி உள்ள பீடமும் உள்ளது. மூலவர் சந்நிதி மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே தெற்குப்பார்த்த இறைவியின் சந்நிதி உள்ளது. இவ்விரு கோவில்களும் தனித்தனியே வலம் வருமாறு தனிப்பிரகாரங்களோடு அமைந்துள்ளன.
அம்பிகையை மணந்து கொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் "துணைவந்த விநாயகர்" என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டிருக்கிறார்.
உட்பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகரையும் தரிசிக்கலாம். கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசண்முகரை பார்த்துப் பரவசம் அடையலாம். அத்தனை கலையழகுடன் இவர் காட்சி அளிக்கிறார். பிரகாரத்தின் வணகிழக்குப் புறத்தில் நவக்கிரகங்கள், சப்தரிஷீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர் மற்றும் பஞ்ச லிங்கங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன.
அம்மரம் குடையாக அமைய அம்பாளைத் திருமணம் செய்து கொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளினார். அம்மரத்தினடியில் இன்றும் இரண்டு பாதுகைகள் இருப்பதைக் காணலாம். எனவே இத்தலம் உத்தாலவனம் என்று பெயர் பெற்று பின் மருவி குத்தாலம் என்றாயிற்று.
நடை திறந்திருக்கும் நேரம்
இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வைத்தீஸ்வரன் கோயில்: சீர்காழிக்குத் தென்மேற்கே 5 கி.மீட்டர் தூரத்தில் பிரதான சாலையில் ஸ்ரீவைத்தியநாதஸ்வாதி ஆலயம் உள்ளது. செவ்வாய் கோத்திரம் சிவபெருமான் வைத்திய நாதராய் (நோய் தீர்ப்பவராய்) வந்தவர். புள்-ஜடாயு, இவருக்கு-வேதம், வேல்முருகன் வழிபட்ட தலம். நோய் தீர்க்கும் வல்லமை பெற்ற திருத்தலம். இத்தலத்தின் தலவிருட்சம் உத்தால மரம் என்ற் ஒரு வகை ஆத்தி மரம். ஆலயம் ஊருக்கு நடு நாயகமாக விளங்குகிறது. 5 நிலை இராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. இரண்டு பிரகாரங்கள் கொண்டது.
கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் உள்ளன. வலதுபுறம் ஸ்தல விருட்சமான உத்தால மரமும் அதை சுற்றி உள்ள பீடமும் உள்ளது. மூலவர் சந்நிதி மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே தெற்குப்பார்த்த இறைவியின் சந்நிதி உள்ளது. இவ்விரு கோவில்களும் தனித்தனியே வலம் வருமாறு தனிப்பிரகாரங்களோடு அமைந்துள்ளன.
அம்பிகையை மணந்து கொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் "துணைவந்த விநாயகர்" என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டிருக்கிறார்.
உட்பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகரையும் தரிசிக்கலாம். கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசண்முகரை பார்த்துப் பரவசம் அடையலாம். அத்தனை கலையழகுடன் இவர் காட்சி அளிக்கிறார். பிரகாரத்தின் வணகிழக்குப் புறத்தில் நவக்கிரகங்கள், சப்தரிஷீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர் மற்றும் பஞ்ச லிங்கங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன.
அம்மரம் குடையாக அமைய அம்பாளைத் திருமணம் செய்து கொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளினார். அம்மரத்தினடியில் இன்றும் இரண்டு பாதுகைகள் இருப்பதைக் காணலாம். எனவே இத்தலம் உத்தாலவனம் என்று பெயர் பெற்று பின் மருவி குத்தாலம் என்றாயிற்று.
நடை திறந்திருக்கும் நேரம்
இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்
» அன்னையே ஆலயம்
» புஷ்பரதேஸ்வரர் ஆலயம்
» நரசிம்மர் ஆலயம்
» பிரம்மஸ்தான ஆலயம்
» அன்னையே ஆலயம்
» புஷ்பரதேஸ்வரர் ஆலயம்
» நரசிம்மர் ஆலயம்
» பிரம்மஸ்தான ஆலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum