அற்புத நாராயணன் கோவில்!
Page 1 of 1
அற்புத நாராயணன் கோவில்!
கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் வழியில் சங்கனாச்சேரி உள்ளது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்கடித்தானம் என்ற ஊரில் அற்புத நாராயணன் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாள் சகாதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள மதில்கள் பூதங்கள் ஒரே நாளில் உருவாக்கியது.
கோவிலின் முன்னும் பின்னுமாக இரட்டைக் கொடிமரம் உள்ளது. ஒரே கர்ப்பக் கிரகத்தில் பெருமாள் கிழக்குமுகமாகவும், நரசிம்மர் மேற்குமுகமாகவும் அருள் பாலிக்கிறார். கோவிலின் முகப்பில் லஞ்சம் வாங்கியன் என்ன கதியடைவான் என்பதைக் காட்டும் விதமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு காவலாளியின் உடல் கோவில் முன் வைக்கப்பட்டிருப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.
சகாதேவன் இந்தப்பகுதியில் கோவில் கட்ட வேண்டி வந்தபோது பெருமாள் விக்ரகம் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் தீக்குளித்து இறந்து போக முடிவு செய்து அதற்காக தயாரானபோது தான் பெருமாள் விக்ரகம் தானாகத் தோன்றியது. இந்த அற்புதத்தை குறிக்கும் வகையில்தான் இங்குள்ள் நாராயணருக்கு அற்புத நாராயணன் என்று பெயர் வந்தது.
இங்குள்ள பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாக ஐதீகம். இங்கு நாராயணர் கற்பகவல்லி நாச்சியார் சமேதராக உள்ளார். வட்ட வடிவமான கர்ப்பக்கிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர்.
ஒரே கர்ப்பக் கிரகத்தில் இரண்டு சந்நிதிகள் இருப்பதால் இங்கு இரட்டைக் கொடிமரம் உள்ளது. கருவறைக்கு தெற்கே தட்சணாமூர்த்தி, விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
நடை திறந்திருக்கும் நேரம்......
இக்கோவிலில் காலை 5 முதல் பகல் 11 மணி வரையிலும், மாலையில் 5 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும்.
போக்குவரத்து வசதி...
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் மூலம் கோட்டயம் செல்ல வேண்டூம். கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் வழியில் சங்கனாச்சேரி உள்ளது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் திருக்கடித்தானம் கோவில் அமைந்துள்ளது. உணவு, தங்குமிட வசதிகள் சங்கனாச்சேரியில்தான். அங்கிருந்து திருக்கடித்தானம் சென்று வர பஸ்,ஆட்டோ வசதிகள் உண்டு
கோவிலின் முன்னும் பின்னுமாக இரட்டைக் கொடிமரம் உள்ளது. ஒரே கர்ப்பக் கிரகத்தில் பெருமாள் கிழக்குமுகமாகவும், நரசிம்மர் மேற்குமுகமாகவும் அருள் பாலிக்கிறார். கோவிலின் முகப்பில் லஞ்சம் வாங்கியன் என்ன கதியடைவான் என்பதைக் காட்டும் விதமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு காவலாளியின் உடல் கோவில் முன் வைக்கப்பட்டிருப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.
சகாதேவன் இந்தப்பகுதியில் கோவில் கட்ட வேண்டி வந்தபோது பெருமாள் விக்ரகம் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் தீக்குளித்து இறந்து போக முடிவு செய்து அதற்காக தயாரானபோது தான் பெருமாள் விக்ரகம் தானாகத் தோன்றியது. இந்த அற்புதத்தை குறிக்கும் வகையில்தான் இங்குள்ள் நாராயணருக்கு அற்புத நாராயணன் என்று பெயர் வந்தது.
இங்குள்ள பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாக ஐதீகம். இங்கு நாராயணர் கற்பகவல்லி நாச்சியார் சமேதராக உள்ளார். வட்ட வடிவமான கர்ப்பக்கிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர்.
ஒரே கர்ப்பக் கிரகத்தில் இரண்டு சந்நிதிகள் இருப்பதால் இங்கு இரட்டைக் கொடிமரம் உள்ளது. கருவறைக்கு தெற்கே தட்சணாமூர்த்தி, விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
நடை திறந்திருக்கும் நேரம்......
இக்கோவிலில் காலை 5 முதல் பகல் 11 மணி வரையிலும், மாலையில் 5 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும்.
போக்குவரத்து வசதி...
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் மூலம் கோட்டயம் செல்ல வேண்டூம். கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் வழியில் சங்கனாச்சேரி உள்ளது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் திருக்கடித்தானம் கோவில் அமைந்துள்ளது. உணவு, தங்குமிட வசதிகள் சங்கனாச்சேரியில்தான். அங்கிருந்து திருக்கடித்தானம் சென்று வர பஸ்,ஆட்டோ வசதிகள் உண்டு
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில்
» அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில்
» நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணன்
» நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணன்
» அமெரிக்காவில் கட்டப்பட்ட சுவாமி நாராயணன் கோயில் திறப்பு
» அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில்
» நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணன்
» நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணன்
» அமெரிக்காவில் கட்டப்பட்ட சுவாமி நாராயணன் கோயில் திறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum