தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணஞ்சேரி

Go down

திருமணஞ்சேரி Empty திருமணஞ்சேரி

Post  birundha Wed Mar 27, 2013 1:30 pm

ஸ்தல வரலாறு.....

இத்தலத்தில் இறைவன் சிவபெருமான் கல்யாண சுந்தரர் வடிவங்கொண்டு இறைவி கோகிலாம்பிகையைத் திருமணம் செய்ததால், இத்தலம் திருமணஞ்சேரி என்ற பெயர் உண்டாயிற்று. இத்தலத்தில் அம்பிகை, இறைவன் சிவபெருமானை நோக்கி, மீண்டும் ஒருமுறை தன்னை மணந்து கொள்ளுமாறு பிரார்த்தனை செய்தார்.

ஆனால் இறைவன் வருவது தாமதிக்கவே அம்பிகை அதன் குறிப்பறியாது நடந்து கொண்டார். அதைக் கண்ட சிவபெருமான் கோபங்கொண்டு, அம்பிகையைப் பசுவாகப் பிறக்குமாறு ஆணையிட்டார். அதன்படி அம்பிகை, லட்சுமி, சரசுவதி, இந்திராணி சூழப் பசுவடிவத்துடன் அரசங்காடு முதலிய இடத்தைச் சுற்றி வந்தார். பெருமாள், பசுக்களை மேய்ப்பவராக உருவங்கொண்டு அவைகளைப் பாதுகாத்து வந்தார்.

மேலும் அம்பிகை (பசுவாகிய) வழங்கிய பாலினைப் பெருமாள் பெற்று, குளம்பின் வருடலால் மகிழ்ந்தும், உமையம்பிகையை, பரதமகரிஷி நடத்திய வேள்விக்குண்டத்தில் தோன்றச்செய்து, திருமணஞ்சேரியில் திருமணம் செய்து கொணடார் என்பது செய்தியாகும். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள உத்வாகநாதர், கோகிலாம்பிகையை, திருமணம் தடைபடுபவர்கள் வந்து வழிபட்டு அர்ச்சனை செய்து, கல்யாண சுந்தரருக்கு மாலை சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் நடைபெறுகிறது.

இத்தலத்திற்குத் திருமணம் உறுதி செய்யப்பட்ட பின்னர் தம்பதி சமேதராக வந்து வழிபட்டுச் சென்றால், இல்வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெறுவார்கள். இத்திருக் கோவில்களில் எழுந்தருளியுள்ள ராகு பகவானுக்கு பாலாபிஷேகம், பால்பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டால், ராகு கிரகதோஷம் நிவர்த்தியாகி புத்திரசந்தான விருத்தி ஏற்படுகிறது. அதன்படி தற்காலத்திலும் வந்து மக்கள் வழிபட்டு இறைவனை பிரார்த்தனை செய்து, புத்திரப் பேறினையும் பெற்றுச் செல்கின்றனர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum