தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேதபுரீஸ்வரர் திருக்கோயில்- திருவேதிகுடி

Go down

வேதபுரீஸ்வரர் திருக்கோயில்- திருவேதிகுடி Empty வேதபுரீஸ்வரர் திருக்கோயில்- திருவேதிகுடி

Post  birundha Wed Mar 27, 2013 1:41 am

ஸ்தல வரலாறு....

மூலவர் - வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர்
அம்மன் - மங்கையர்க்கரசி
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - வைத தீர்த்தம்
பழமை - 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் - திருவேதிகுடி
ஊர் - திருவேதிகுடி
மாவட்டம் - தஞ்சாவூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர், சம்பந்தர்

சப்தஸ்தான தலங்களில் நான்காம் கோயில் இது. முழுவதும் கல்லால் அமைக்கப்பட்ட விமானத்தின் கீழ், வேதபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். விமானத்தின் நான்கு திசைகளிலும் வேதங்களை உணர்த்தும் நந்திகள் உள்ளன. கிழக்கு நோக்கிய கோயில். சாலையோரத்திலேயே உள்ளது. கோயிலுள் நுழையும் முன்னரே அம்பாள் சன்னிதி தனியாக வெளியே உள்ளது. அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியது. உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் வருகிறது. மண்டபத்தில் வினாயகர் நான்கு வேதங்களையும் கேட்கும் நிலையில் இடக்காலை உயர்த்தி ஒருக்களித்து நின்று செவிசாய்த்து அற்புதமாக காட்சியளிக்கிறார். நேரே தெரிவது மூலவர். வடதிசையில் சிவனுடன் எப்போதும் இருக்கும் மனோன்மணி அம்பிகை சிலை உள்ளது. சிவன் சன்னதிக்குப் பின்புள்ள (கோஷ்டம்) அர்த்தநாரீஸ்வரர், விசேஷமானவர். வழக்கமான சிவனுக்கு இடப்புறம்தான், அம்பாள் இருக்கும்படி அர்த்தநாரீஸ்வரர் சிலை இருக்கும். இங்கு, அம்பிகை வலப்புறம் இருக்கிறாள். இத்தகைய அமைப்பைக் காண்பது மிக அபூர்வம். தற்போது இந்த சிலை சேதமடைந்த நிலையில் உள்ளது. வேதம் கேட்பதில் விருப்பமுள்ள பிள்ளையார் இத்தலத்தில் தலை சாய்த்து அருள்பாலிக்கிறார். எனவே இவர் “வேத பிள்ளையார்” எனப்படுகிறார். நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் இத்தலத்தில் அதிகமாக வாழ்ந்த காரணத்தினால் “சதுர்வேதிமங்கலம்” என்ற பெயரும் இருந்துள்ளது செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையுள்ளவர்கள் இங்குள்ள சுப்ரமணியருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர். பிரகாரத்தில் லட்சுமி நாராயணர் இருக்கிறார். அருகில் ஆஞ்சநேயர் வணங்கியபடி கிரீடம் இல்லாமல் இருக்கிறார். சிவன் சன்னதியைச் சுற்றிலும் 108 லிங்கங்,உஉ கள் உள்ளன. நடை திறக்கும் நேரம்: காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum