தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போராட்டம் பற்றி ஆலோசனை

Go down

போராட்டம் பற்றி ஆலோசனை Empty போராட்டம் பற்றி ஆலோசனை

Post  meenu Tue Mar 26, 2013 5:12 pm

போராட்டத்தை தொடர்வதற்கான ஆலோசனைகள் வழங்க நல்லகண்ணு, பழ.நெடுமாறன் ஆகியோரை அழைக்க மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டம்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜோ பிரிட்டோ நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:–இலங்கையில் விவகாரத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை புறக்கணிப்பது, இலங்கையில் பொதுவாக்கெடுப்பு போன்ற 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் போராட்டத்தை தொடங்கினோம்.ஆனால் சில கல்லூரி மாணவர்கள் இதே பெயரை பயன்படுத்திக்கொண்டு அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியது வருந்தத்தக்கதாகும்.

அரசியல் கட்சிகள்

தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்து போராட்ட களத்தில் உடனிருந்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் போராட்டத்தை வழிநடத்தி செல்ல உரிமை உண்டு.ஆனால் தனிப்பட்ட கட்சியின் கொள்கைகளுள் நாட்டம் உடையவர்கள் இந்த மாணவர்களின் போராட்டத்தை விட்டுவிடுங்கள். மாணவர்கள் போராட்டத்தை இவர்களை போன்றவர்கள் வழிநடத்தினால் அவர்களின் சொந்த கட்சியின் சித்தாந்தத்தை மற்ற மாணவர்களிடம் மறைமுகமாக திணிக்க வாய்ப்பு உள்ளது.

ஒரே குடையின் கீழ்

மனித நேயம் உள்ள தமிழர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் இணைத்து ஈழத்தில் பொது வாக்கெடுப்பு வேண்டி இந்தியாவை நிர்ப்பந்திக்கும் வகையில் போராட்டம் அமையும். அதற்கான ஆதரவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கட்சிகளையும் அனைத்து மாநிலங்களில் உள்ள மாணவர்களையும் நியாயங்களை எடுத்துரைப்போம்.தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்திய பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடத்தி நிறைவேற்ற வேண்டிய வகையில் போராட்டம் அமையும்.

நல்லகண்ணு, பழ.நெடுமாறன்

வரும் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் மாணவர்கள் கட்டமைப்பு ஒரு இறுதியான வடிவம் பெறும். அரசியலில் அனுபவமுள்ள நடுநிலையான பொதுவாழ்வில் எளிமையாக வாழும் நல்லக்கண்ணு மற்றும் பழ.நெடுமாறன் போன்றவர்களை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க அழைப்பு விடுக்கப்போகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறியதாவது:–இலங்கை பிரச்சினை தொடர்பாக 28–ந்தேதி காலை 11 மணி அளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக தெற்கு ரெயில்வே அலுவலகம் சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கிய போலீசாரை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum