தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்வி சுற்றுலா சென்றபோது பரிதாபம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி; 35 பேர் படுகாயம்

Go down

கல்வி சுற்றுலா சென்றபோது பரிதாபம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி; 35 பேர் படுகாயம்  Empty கல்வி சுற்றுலா சென்றபோது பரிதாபம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி; 35 பேர் படுகாயம்

Post  meenu Tue Mar 26, 2013 5:00 pm

கல்வி சுற்றுலாவுக்காக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சென்ற பஸ், மூணாறு அருகே 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

கல்வி சுற்றுலா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சித்திரம் தாராபாய் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த 21 மாணவர்கள், 15 மாணவிகள் உள்பட 41 பேர் கல்வி சுற்றுலாவுக்காக கடந்த 20–ந் தேதி கல்லூரியில் இருந்து ஒரு பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டனர்.பஸ்சை திருவனந்தபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் மற்றொரு டிரைவரும் சென்றார்.

கொடைக்கானல்

அவர்கள் சென்னைக்கு சென்றுவிட்டு, 23–ந் தேதி மாலையில் கொடைக்கானல் வந்தனர். அன்று இரவு அவர்கள் கொடைக்கானலில் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் கொடைக்கானலில் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர். நேற்று அவர்கள் மூணாறுக்கு புறப்பட்டு சென்றனர்.பஸ் நேற்று காலை தமிழ்நாடு எல்லையை தாண்டி கேரள எல்லைப்பகுதியான குமுளிக்கு சென்றது. குமுளியில் இருந்து மூணாறுக்கு கொச்சி–மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றனர். பூப்பாறைக்கும், மூணாறுக்கும் இடையே சாலை பராமரிப்பு பணிகள் நடப்பதால், அந்த மலைப்பாதை 15 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது

எனவே அவர்கள் பூப்பாறையில் இருந்து ராஜாக்காடு, ராஜாகுமரி, குஞ்சிதண்ணி வழியாக மூணாறுக்கு மாற்று பாதைவழியாக சென்று கொண்டு இருந்தனர். இந்த பாதை கொண்டை ஊசி வளைவுப் பாதையாகும்.காலை 11.30 மணிக்கு ராஜாக்காடு, முள்ளக்கானம் மலைப்பகுதியில் ஒரு திருப்பத்தில் பஸ் சென்று கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.அப்போது ரோட்டின் ஓரத்தில் உள்ள சுமார் 200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில் பஸ் உருண்டு 200 அடி பள்ளத்தில் உள்ள ரோட்டில் விழுந்தது.

மரண ஓலம்

பஸ்சில் பயணம் செய்த மாணவ–மாணவிகள் ‘அய்யோ, அம்மா’ என்று மரண ஓலமிட்டனர். பள்ளம் அடர்ந்த காடுபகுதியாகும். இதில் பஸ் சுக்குநூறாக நொறுங்கியது.மாணவ–மாணவிகளின் அலறும் சத்தம் கேட்ட முள்ளக்கானம் பகுதியில் உள்ளவர்கள் பதறியடித்துக்கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இடிபாடுகளில் சிக்கிய மாணவ–மாணவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். அப்பகுதி மக்கள் அவர்களை மீட்க முயன்றனர். அவர்களால் முடியவில்லை.உடனே அவர்கள் ராஜாக்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

8 பேர் பலி

இந்த விபத்தில் மாணவி தனிலா (வயது 22), மாணவர்கள் விக்னேஷ் (22), சைசூ (22), திதீன் (22), சரத்சந்திரன் (22), பிரனேஷ் (22), போகன் (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 36 பேர் சிகிச்சைக்காக ராஜாக்காடு, அடிமாலி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக 15 பேர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.இவர்களில் ஜமுனா (22) என்ற மாணவி, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.இந்த விபத்து குறித்து ராஜாக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
» கல்லூரி வாழ்வை கவித்துவமாக சொல்லும் கதை… என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேரும் சித்தார்த், டைசன், விமல், ஷங்கர் நால்வரையும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்கின்றனர். மாணவிகள் மது, பெனாஸ் போன்றோரும் ராக்கிங்குக்கு ஆளாகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர
» சேலம் கல்லூரி மாணவர்கள் தர்ணா
» புதுக்கோட்டை கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்
» கலாசாரத்தை சீரழிக்கும் கல்லூரி மாணவர்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum