தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்

Go down

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம் Empty நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்

Post  meenu Mon Mar 25, 2013 5:04 pm

இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் சிறந்த புத்தகம். உலகின் முதல் பல்கலைக்கழகம், கி.மு. 700ல் இந்தியாவில் உள்ள தட்சசீலத்தில் நிறுவப்பட்டது. உலகெங்கும் இருந்து வந்த 10,500க்கும் அதிகமான மாணவர்கள், இங்கு கல்வி கற்றனர். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவ முறையே, மனித குலத்துக்கு அறிமுகமான முதல் மருத்துவ முறை. இம்முறை 2,500 வருடங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டது.

கப்பலை செலுத்தும் கலை, சுமார் 6,000 வருடங்களுக்கு முன் சிந்து நதிக்கரையில் பிறந்த ஒன்றாகும்.1896–ம் ஆண்டு வரை, உலகத்தில் வைரங்கள் கிடைக்கும் ஒரே இடமாக இந்தியா மட்டுமே இருந்துள்ளது. இப்படி பல அபூர்வ தகவல்களைக் கூறுகிறார், ஆசிரியர். ஜெர்மானிய தத்துவஞானி மாக்ஸ்முல்லர், ‘‘நான் உலகம் முழுவதும் சுற்றி வந்து பார்த்ததில், உலகிலேயே சிறந்த செல்வமும், சக்தியும், அழகும், இயற்கையால் வழங்கப்பட்ட இடம் எதுவென்றால், நான் இந்தியாவைக் காட்டுவேன்’’ என்று கூறியுள்ளதை, வேறு அறிஞர்களும் வழிமொழிந்துள்ளனர். சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum