தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாசிப்பு பழக்கத்தை நேசிக்க வேண்டும்:கார்த்தி

Go down

வாசிப்பு பழக்கத்தை நேசிக்க வேண்டும்:கார்த்தி Empty வாசிப்பு பழக்கத்தை நேசிக்க வேண்டும்:கார்த்தி

Post  ishwarya Mon Mar 25, 2013 2:05 pm



வாசிப்பு பழக்கத்தை இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டுமென, நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்தார்.

ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி, ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசியது: ஈரோடு புத்தகத் திருவிழா 8-வது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அறிவை வளர்க்கவும், விசாலப்படுத்தவும் வாசிப்பு பழக்கம் மிகவும் அவசியம். இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கம் குறைவாக உள்ளது. வாசிப்பு பழக்கத்தை இளைஞர்கள் கைக்கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் அடுத்தகட்ட வளர்ச்சியை எளிதில் எட்ட முடியும்.

"ஈரோடு வாசிக்கிறது' என்ற தலைப்பில் மாரத்தான் நடைபெறுவது பொருத்தமாக உள்ளது. ஈரோடு மட்டுமின்றி தமிழகமே வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி தலைமையில் வாசிப்பு குறித்த உறுதிமொழியை கல்லூரி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum