ஜெயலலிதா, கருணாநிதி புகழ் மறையாது: ரஜினிகாந்த்
Page 1 of 1
ஜெயலலிதா, கருணாநிதி புகழ் மறையாது: ரஜினிகாந்த்
சென்னை, ஆக. 29: முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது புகழ் என்றும் மறையாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
இதே போன்று இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் புகழும் அழியாது என்று அவர் தெரிவித்தார்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
ஜெயா தொலைக்காட்சியில் "சோ'சாரின் எங்கே பிராமணன் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தேன். அதை நிறுத்தி விட்டார்கள். அது பற்றி அவரிடம் நான் கேட்டேன். சில வேலைகள் காரணமாக தொடர முடியவில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதாவும் இதுபற்றி கேட்டதாகவும் கூறினார். முதல்வர் சொல்லியே கேட்காத அவர், நான் சொல்லியா கேட்கப் போகிறார். முதல்வர் சொல்லியே கேட்காத ஓர் ஆள் உண்டு என்றால் அது "சோ'சார்தான்.
ஒவ்வொரு மனிதனும் இரண்டு முறை இறக்கிறான். பெயரும், புகழும் பெற்றவர்கள் அவற்றை இழக்கும்போது ஒரு முறை இறக்கிறார்கள். பின்னர் உயிர் உடலில் இருந்து பிரியும்போது ஒரு முறை இறக்கிறார்கள். சாகாவரம் பெற்ற தலைவர்கள் இறந்தாலும் அவர்கள் புகழ் அழியாது.
அந்த வகையில் காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் மறைந்தாலும் அவர்களது புகழ் மறையவில்லை. அதேபோல், இப்போதுள்ள சில தலைவர்கள் அதாவது முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா போன்றவர்களின் புகழ் என்றும் மறையாது. வெற்றி, தோல்வி என எதுவும் அவர்களைப் பாதிக்காது. அதுபோல விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்
புகழும் என்றும் மறையாது என்றார் ரஜினிகாந்த்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடவடிக்கை வேண்டும் - ஜெயலலிதா, கருணாநிதி
» பிரபு மகனை வாழ்த்திய ஜெயலலிதா, கருணாநிதி!
» ரஜினிக்கு ஜெயலலிதா, கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின் வாழ்த்து!
» விஜய், சூர்யா போல புகழ் பெற வேண்டும் – பேரனுக்கு கருணாநிதி வாழ்த்து
» சினேகா- பிரசன்னாவை வாழ்த்திய கருணாநிதி
» பிரபு மகனை வாழ்த்திய ஜெயலலிதா, கருணாநிதி!
» ரஜினிக்கு ஜெயலலிதா, கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின் வாழ்த்து!
» விஜய், சூர்யா போல புகழ் பெற வேண்டும் – பேரனுக்கு கருணாநிதி வாழ்த்து
» சினேகா- பிரசன்னாவை வாழ்த்திய கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum