சாயிபாபா சொன்ன இரண்டு ஆடுகள் கதை
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
சாயிபாபா சொன்ன இரண்டு ஆடுகள் கதை
சாயிபாபா சொன்ன இரண்டு ஆடுகள் கதை
ஒரு நாள் சாயிபாபா லெண்யிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மனிதன் ஒரு ஆட்டு மந்தையை ஓட்டிப் போவதைக் கண்டார். அங்கு இருந்த ஆடுகளில் இரண்டு மட்டுமே அவர் கவனத்தை கவர, சாயிபாபா அவற்றை எடுத்துக் கொஞ்சி விட்டு அவற்றை 32 ரூபாய் அளித்து பெற்றுக்கொண்டார்.
அந்த இரண்டு ஆடுகளின் விலை அன்றைய நிலைக்கு ரூபாய் நான்கு முதல் எட்டு வரையில் இருக்கும். ஆனால் சாயிபாபா இவற்றிற்கு 32 ரூபாய் அளித்துப் பெற்றுக் கொண்டதைப் பார்த்து பக்தர்கள் வியப்புற்றார்கள். பாபா ஆட்டு வியாபாரியிடம் ஏமாந்தார் என்றும் கருதினார்கள்.
சாமாவும், பய்யாகோடேயும் இதைப் பற்றிய விளக்கம் கேட்டார்கள். பாபா தம் சொந்த செலவில் அந்த ஆடுகளுக்கு இலைகளையும், தழைகளையும், பருப்புகனையும் பெற்று கொடுக்கும்படி கூறினார். பிறகு அந்த ஆடுகளின் முன் ஜென்ம கதையை அவர் கூறத் தொடங்கினார். இவர்கள் என் நண்பர்கள்.
இருவருமே உடன் பிறந்தவர்கள் பெரியவன் சோம்பேறி, சிறியவன் உழைப்பாளி உழைப்பால் உயர்ந்தான். இதை அறிந்த அண்ணன் பொறாமையால் தம்பி என்றும் பாராமல் அவனைக் கொல்ல நினைத்து ஆட்களை விடுத்தான். இதனை அறிந்த தம்பியும் அவனைப் பகையாளியாக நினைத்தான்.
ஆகவே இருவரும் பகைவர்கள் ஆனார்கள். ஒருநாள் அண்ணன் தடியைக் கொண்டு தம்பியை தலையில் பலமாக அடிக்கவும், அதே நேரத்தில் தம்பி தன்னிடமிருந்த கோடாரியால் அண்ணன் கழுத்தில் வெட்ட இருவரும் ஒரே நேரத்தில் மரணம் அடைந்தனர். அவர்கள்தான் இப்பொழுது வெள்ளாடுகளாகப் பிறந்துள்ளனர்.
அவர்களை நான் அறிந்தேன். அவர்கள் என்னை அறிய முடியாது அல்லவா? விலைக்கு வாங்கிய காரணத்தினால் அந்த ஆடுகள் முக்தியை அடையும் என்று கூறி அவற்றை திரும்பவும் வியாபாரியிடமே அனுப்பி விட்டார் சாயிபாபா.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஆடுகள் வளர்ப்பு
» ஆடுகள் வளர்ப்பு
» என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
» ஆடுகள் பராமரிப்பு நோய் தீர்க்கும் வழிகளும் இனப்பெருக்க முறைகளும்
» அரசு இலவச திட்டத்தில் வழங்கிய 65 ஆடுகள் மர்ம சாவு
» ஆடுகள் வளர்ப்பு
» என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
» ஆடுகள் பராமரிப்பு நோய் தீர்க்கும் வழிகளும் இனப்பெருக்க முறைகளும்
» அரசு இலவச திட்டத்தில் வழங்கிய 65 ஆடுகள் மர்ம சாவு
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum