தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வக்ர காளியம்மன் கோவில்

Go down

வக்ர காளியம்மன் கோவில் Empty வக்ர காளியம்மன் கோவில்

Post  meenu Fri Jan 18, 2013 12:04 pm

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை என்ற இடத்தில் புகழ்மிக்க வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. வக்கிராசூரன் என்னும் அரக்கன் தனது தவ வலிமையால் கொடுமைகள் பல செய்து வந்தான். அவனது கொட்டத்தை அடக்க வேண்டி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

சிவபெருமான் வைகுண்ட வாசனான மகாவிஷ்ணுவை அழைத்து வக்கிரா சூரனை வதம் செய்யும்படி கூற, அவரும் சூரனுடன் போரிட்டு தனது சக்கரத்தை வக்கிராசூரன் மீது பிரயோகம் செய்து அவனை அழித்தார். வக்கிராசூரன் தங்கையான துன்முகியும் தன் அண்ணனை போலவே கொடுஞ்செயல் புரிந்து வந்தாள்.

அரக்கியான அவளை வதம் செய்ய சிவபெருமான் பார்வதியிடம் கூற, பார்வதி தேவியும் துன்முகியை வதம் செய்ய முயன்றாள். ஆனால் துன்முகி அப்போது கருவுற்றிருந்தாள்.

சாஸ்திர முறைப்படி, கர்ப்பிணியையோ அல்லது சிசுவையோ வதம் செய்யக்கூடாது என்பதால் அகிலாண்டநாயகியான பார்வதிதேவி துன்முகியின் வயிற்றை கிழித்து அவள் வயிற்றில் இருந்த சிசுவை தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு அரக்கியான துன்முகியை வதம் செய்தார்.

வக்கிராசூரனின் தங்கையை வதம் செய்து அழித்ததால் வக்கிர காளியம்மனாக அவ்விடத்திலேயே அமர்ந்து அன்னை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என்பது இக்கோவிலின் வரலாறு.

சிறப்புகள்:

பவுர்ணமி இரவு 12 மணிக்கும், அமாவாசையில் பகல் 12 மணிக்கும் இங்கு காட்டப்படும் ஜோதி தரிசனம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஜோதி தரிசனத்தைக் காண தமிழகம்-புதுவை மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளாமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகிறார்கள்.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.முதலில் விழுப்புரம் சென்று பின் அங்கிருந்து திருவக்கரையில் இந்த கோவில் உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum