தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அபயவரதீஸ்வரர் திருக்கோவில்

Go down

அபயவரதீஸ்வரர் திருக்கோவில் Empty அபயவரதீஸ்வரர் திருக்கோவில்

Post  meenu Fri Jan 18, 2013 11:17 am

தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபயவரதீஸ்வரராக இத்தல இறைவன் விளங்குகிறார். முன்னொரு காலத்தில் அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர்.

ஏனென்றால் பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நாளிலும், சிவபெருமான் அபயம் தருபவராக உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. எனவே இந்த மண்டலத்தில் நுழைந்திடவே அசுரர்கள் பயப்படுவர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும் என்றும் கூறப்படுகிறது.

பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகிய இரு மகரிஷிகளும் தினமும் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஸரவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும்.

இந்த சக்தியின் வடிவமாக ஸரவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிவர்கள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.

"ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியின் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும்
ஆதியில் ஆதிரு ஆதிரை ஆஸமர் ஆரணா!"

என்ற திருவாதிரை கோவில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன்நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ஸரவ மகரிஷியின் அருளையும் பெறலாம்.

சிவன் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் அபய வரதீஸ்வரர் திருக்கோவிலாகும். ஆயுஷ்ஹோமமும், பிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது.

பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதி வீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளார். அவரது பெயரால் அதிவீரராமன் பட்டனமாகி, தற்போது அதிராம்பட்டினமாக மாறி விட்டது. இத்தல அம்மன் சுந்தரநாயகி கடலை நோக்கி அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயர் உண்டு.

போக்குவரத்துக்கு வசதி:

தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ள பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம் பட்டினத்தை அடையலாம்.எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் சென்று பின் அங்கிருந்து பட்டுக்கோட்டை வழியாக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுகோட்டை சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பஸ் மூலம் இந்த கோவிலை அடையலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum