தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிரக தோஷம் விலகும் சதுரகிரி தீர்த்தங்கள்

Go down

கிரக தோஷம் விலகும் சதுரகிரி தீர்த்தங்கள் Empty கிரக தோஷம் விலகும் சதுரகிரி தீர்த்தங்கள்

Post  meenu Sun Mar 24, 2013 1:39 pm

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் `சந்திர தீர்த்தம்' இருக்கிறது. இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம். கவுண்டின்னிய தீர்த்தம் சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது.

இந்தத் தீர்த்தம் தெய்வீககத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கையிலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம். இந்த நதியில் நீராடினால் கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய பயனுண்டு.

இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு "பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டும். சந்தன மகாலிங்கம் தீர்த்தம் சதுரகிரியின் மேல் `காளிவனம்' என்கிற வனப்பகுதி ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக் சிவபெருமானை விட்டுப்பிரிந்து, அமர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும். இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய `திருமஞ்சனப் பொய்கை' உண்டு. காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட பிரம்மதீர்த்தம் ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது.

இது தவிர கோரக்கர், ராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட "பொய்கைத் தீர்த்தம்'' "பசுக்கிடைத் தீர்த்தம்'' குளிராட்டித் தீர்த்தம்'' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன. மகாலிங்கம் கோவிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum