தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் நடிப்பேன்: நயன்தாரா

Go down

மீண்டும் நடிப்பேன்: நயன்தாரா Empty மீண்டும் நடிப்பேன்: நயன்தாரா

Post  ishwarya Sat Mar 23, 2013 5:47 pm



நயன் தாரா திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பேன் என்று கூறியுள்ளார். தமிழில் ஹரி இயக்கிய ஐயா படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. அந்த படத்தின் வெற்றி காரணமாக சந்திரமுகி, குசேலன் என்று ரஜினி படங்களிலேயே நடிக்கும் அளவுக்கு ஜெட் வேகத்தில் முன்னேறினார்.

இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக வில்லு என்ற படத்தில் நடித்த போது அப்படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், புதிய பட வாய்ப்புகளை தவிர்த்தார் நயன்தாரா. கடைசியாக தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராமஜெயம் என்ற படம் கடந்த 18ம் தேதி வெளியானது.

இதையடுத்து நயன் மீண்டும் நடிப்பாரா, நடிக்க மாட்டாரா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது, பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளும் வரை நடிக்கும் எண்ணம் இல்லை. அதன் பிறகு நல்ல வாய்ப்புகள் வந்தால் மீண்டும் நடிப்பது பற்றி யோசித்து முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum