கை நிறைய படங்களுடன் நகுல்
Page 1 of 1
கை நிறைய படங்களுடன் நகுல்
பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான மாசிலாமணி, கந்தக்கோட்டை என சில படங்களில் நடித்துள்ள நகுல், அதற்குப் பிறகு படங்களில் தலைகாட்டவில்லை.
ஆனால் நிலைமை தற்போது அப்படியில்லை.
சுமார் 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நகுல். அதுவும் மூன்று படங்களிலும் மூன்று விதமான கதாப்பாத்திரங்கள். இதனால் மகிழ்ச்சி துள்ளலில் இருக்கிறார்.
மூன்று படங்களில் ஒரு சேர நடித்து வருவது பற்றி கேட்டால், அவரே சொல்கிறார்..
அறிவழகன் இயக்கத்தில், வல்லினம் என்ற படத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் பேஸ்கட்பால் பிளேயராக நடித்துள்ளேன். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், அதிக மகிழ்ச்சி அடைந்தார். அது தான் எங்களது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக நாங்கள் கருகிறோம். இப்படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளோம். சுமார் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இதற்காக தி.நகரில் மிகப்பெரிய செட் போட்டு பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன என்றார்.
அடுத்த படம்?
நான் ராஜாவாகப் போகிறேன். இதுதான் அடுத்த படத்துக்கான தலைப்பு. இதில் கிக் பாக்சராக நடித்துள்ளேன். இப்படத்துக்கான ஆடியோ வெளியீடு கடந்த டிசம்பரில் நடந்தது. படம் விரைவில் வெளியாக உள்ளது.
நகுல் நடித்து வரும் அடுத்த படம் அமளி, துமளி. இப்படத்தினை இயக்குநர் அதியமான் இயக்கி வருகிறார். இப்படத்தில் நகுலுடன் சாந்தனு பாக்ரயராஜூம் நடித்து வருகிறார். இரண்டு கதாநாயகர்களை வைத்து இப்படம் எடுக்கப்பட்டாலும், படப்பிடிப்புத் தலம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும் என்று நகுல் சொல்கிறார்.
சாந்தனு எனது நண்பன். சாந்தனுவுடன் பணியாற்றுவதை நான் மிகவும் விரும்புகிறேன். இருவரும் சேர்ந்து தங்களுக்கான சீன்களைப் பற்றி பேசி ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வோம். படப்பிடிப்பு தலமே எப்போதும் கலகலப்பாக இருக்கும். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கேலியும், சிரிப்புமாக இருப்போம். அதேப்போல இப்படத்தில் எங்களுடன் நடித்து வரும் சுப்ரமணியபுரம் புகழ் சுவாதியும் நல்ல நண்பர். எங்களுக்கு எப்போதும் உற்சாகமளிப்பார். நாங்கள் மூவரும், அவரவர் ஹிட் பாடல்களை வைத்து அழைக்கப்படுவோம். என்னை நாக்க மூக்க என்று இருவரும் அழைப்பார்கள். சாந்தனுவை டாக்சி என்று நாங்கள் அழைப்போம். சுவாதியை கண்கள் இரண்டால் என்று அழைப்போம் என்றார் நகுல்.
மேலும் அவரே தொடர்கிறார்..
என்னுடைய படங்களிலேயே மிகவும் ஜாலியாக இருந்த படப்பிடிப்பு தலம் என்றால் அது அமளி துமளி தான். மற்ற இரண்டு படங்களிலுமே கடின உழைப்பை வெளிப்படுத்தி நடிக்க வேண்டியிருந்தது. அதே சமயம் இப்படத்தில் ஜாலியாக நடித்துள்ளோம். எங்களது உற்சாகமும், சந்தோஷமும் நிச்சயமாக இப்படம் வெளியாகும் போது ஸ்கீரினில் உங்களிடமும் எதிரொலிக்கும் என்று நினைக்கிறேன் என்று நம்பிக்கையோடு நம்மிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நானும் என் கணவரும் மத்திய அரசு ஊழியர்கள். இறை பக்தி நிறைய உண்டு. கோயில்களுக்கும் நிறைய தொண்டு செய்து வருகிறோம். புகுந்த வீட்டிலும், அலுவலகத்திலும் பொறாமையுடன் எங்களை பார்க்கின்றனர். அலுவலகத்திலும் வீண்பழி சுமத்தி, இடம் மாற்ற முயற்சிக்கின்றனர். மன உளைச்சல
» தங்க நகரம் (படங்களுடன்)
» ஈசாப் குட்டிக் கதைகள் (படங்களுடன்)
» நகுல்-சாந்தனு நடிக்கும் அமளி துமளி!
» கை நிறையப் படங்களுடன் லட்சுமி ராய்!
» தங்க நகரம் (படங்களுடன்)
» ஈசாப் குட்டிக் கதைகள் (படங்களுடன்)
» நகுல்-சாந்தனு நடிக்கும் அமளி துமளி!
» கை நிறையப் படங்களுடன் லட்சுமி ராய்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum