தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தோளில் சாய்வதற்கு ஒரு நட்புவேண்டும்: பிரபு தேவா

Go down

தோளில் சாய்வதற்கு ஒரு நட்புவேண்டும்: பிரபு தேவா  Empty தோளில் சாய்வதற்கு ஒரு நட்புவேண்டும்: பிரபு தேவா

Post  ishwarya Mon Mar 18, 2013 5:49 pm

நயன்தாரா பிரபு தேவா காதல் முறிந்துள்ளது. இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். இதுபற்றி நயன்தாரா அளித்த பேட்டியில், பிரபு தேவாவுக்காக சிலவற்றை விட்டு கொடுத்தேன். திருமணம் வரை சென்ற எங்கள் காதல் தற்போது முறிந்து விட்டது என்றார். சில விஷயங்களை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. உலகில் நிலையானது எதுவும் இல்லை. எங்கள் காதல் முறிவுக்கு பல காரணங்கள் இருக்கலாம். பிரபு தேவாவுடன் பழகிய போது நூறு சதவீதம் உண்மையாக நடந்தேன். அதற்கு மதிப்பு இல்லை எனும் போது உறவை முறித்துக் கொள்வதை தவிர வேறு வாய்ப்பு என்னவாக இருக்க முடியும் என்றும் தெரிவித்தார். நயன்தாராவுடனான காதல் முறிவு குறித்து பிரபு தேவாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: என்னைப்பற்றி நிறைய செய்திகள் வெளி வருகின்றன. நான் கேளாததுபோல் இருக்கிறேன். எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியும். என் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம். வெளிப்படையாக இந்த வதந்திகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியும். ஆனால் சிலர் மனது காயப்படும் என்பதால் அப்படி செய்யவில்லை. இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன். நடந்த விஷயங்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. அவை என் சொந்த விஷயங்கள். காதல் பற்றி நான் எது சொன்னாலும் அது செய்தியாகி விடும். இந்த விஷயங்களை வெளிப்படையாக பேசாததற்காக எனது ரசிகர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். இக்கட்டான நேரத்தில் தோளில் சாய்வதற்கு ஒரு நட்புவேண்டும். அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, என்று கூறினார். மூட்டை கட்டியத இன்னாத்துக்கு அவிழ்க்கணும்....? அட போங்கய்யா........

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum