தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாறியதால் மாரியம்மன்

Go down

மாறியதால் மாரியம்மன் Empty மாறியதால் மாரியம்மன்

Post  gandhimathi Thu Jan 17, 2013 1:30 pm



அபேத்திய வருமனின் மகள் ரேணுகை எனவும், கார்த்த வீரியனை கண்டு மனம் சலனம் பட்டாள் எனவும், மீண்டும் உயிர்பெற்ற பின் காஞ்சீபுரம் அடைந்து சிவலிங்கத்தை நிறுவி பூஜித்தாள் எனவும், உமை உடனுறைய சிவபெருமான் காட்சி தந்து உமையின் மையின் வழி அருள் பாலித்தார் என கூறப்படுகிறது.

ரேணுகா சர்ப்ப குண்டலம் உடையவளாய், வாளும், கட்கமும் கையேந்தி சிறு தேவகங்கள் புடைசூழ தெய்வமாக விளங்கினாள் எனவும் காஞ்சிப்புராணம் கூறும். ஆதி, பகவன் இவர்கட்குப் பிறந்தவன் எனவும் ஏகாலியர் வெள்ளாகி வைக்கும் இடத்தில் பிறந்ததால் உப்பை எனப் பெயர் பெற்றாள் எனவும், பின் அரசனால் வாங்கி வளர்க்கப்பட்டாள் எனவும் சிலர் கூறுவர்.

உயிர் பெற்ற பின் ஏழை பெண்களால் காப்பாற்றப்பட்டு, ஆடை தரப் பெற்றாள் எனவும் எனவேதான் வண்ணார் சில இடங்களில் பூசாரிகளாகவும், கரகம், ஆடுபவர்களாகவும் இருக்கிறார்கள் எனவும் சிலர் கூறுவர். இன்று ஊரெங்கும் உள்ள மாரியம்மன் கோவில்கள் எல்லாம் ரேணுகை கோவில்களே.

தலையும் உடலும் மாறிப் பொருந்தியதால் மாறி எனப்பெயர் ஏற்பட்டது. நாளடைவில் மாரி என திரிந்தது என்பர். மாரி-மழை வெப்பத்தைத் தணிவித்து வெப்ப நோய்களாகிய அம்மை முதலியவற்றைத் தீர்த்து மக்களை மழை போலக் காப்பவள் என்பதால் மாரி எனப் பெயர் பெற்றாள் என்பது பொருத்தமானதாக உள்ளது.

இவள் ஆவி, மகமாயி, செல்வி, செல்லி, செல்லியாத்தாள், செல்லபாண்டி யம்மன், ஆயிரங் கண்ணுடையாள், முத்துமாரி, கங்கம்மாள், கங்கையம்மா, முத்தாலம்மை எனப் பல பெயர்களில் ஊர்தோறும் விளங்குகிறாள்
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum