தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முரட்டுக்காளை ஜெயம் ரவி, லேடி பாக்ஸர் த்ரிஷா

Go down

முரட்டுக்காளை ஜெயம் ரவி, லேடி பாக்ஸர் த்ரிஷா  Empty முரட்டுக்காளை ஜெயம் ரவி, லேடி பாக்ஸர் த்ரிஷா

Post  ishwarya Tue Mar 12, 2013 5:04 pm

சென்னையில் எம்ஜிஆரும், சிவாஜியும் ஊட்டி வளர்த்த பாக்ஸிங் ஏரியா களம்தான், ‘பூலோகம்’. இன்று சுவடுகள் கூட இல்லாமல் போய்விட்ட வடசென்னை பாக்ஸிங் உலகத்தை மறுஉருவாக்கம் செய்து வருகிறார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன். ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’ படங்களின் வெற்றிக்கு டைரக்டர் எஸ்.பி.ஜனநாதனின் பின்னால் நின்றவர், ‘பூலோகம்’ மூலம் முன்னால் வந்திருக்கிறார்.

இந்த களத்தை எப்படி தேர்வு செய்தீர்கள்?
பல வருட தேடல்தான். எனது இயக்குநர் ஜனநாதனுக்கு அந்தக் காலத்து வடசென்னை பாக்ஸிங் நண்பர்கள் சிலர் உண்டு. சிலர் அவரை அடிக்கடி பார்க்க வருவார்கள். இதிலிருந்து நூல் பிடித்தபோது அது தனி உலகம் என்று தெரிந்தது. அதுவே ‘பூலோகம்’ ஆனது. வடசென்னையில் இரண்டு மூன்று பரம்பரையினர் தொடர்ச்சியாக பாக்ஸிங் விளையாடி வந்திருக்கிறார்கள். சொந்த பகைகள் கூட இந்த பாக்ஸிங்கில் தீர்க்கப்படுவது உண்டு. அந்த உலகத்துக்குள் புகுந்து அதன் எச்சம் இந்தக் காலத்தில் தொடர்வது மாதிரியான கதையோடு உருவாகிறது.

ஒரு சண்டைக் காட்சிக்கே இரண்டு கோடி செலவு செய்தீர்களாமே?
25 கல்லூரிகள் கலந்து கொள்ளும் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டியை கிராபிக்ஸ் செய்து ஏமாற்றாமல் ரியலாக நடத்தி படமாக்க நினைத்தோம். திருவண்ணாமலை கல்லூரி ஒன்று உதவிக்கு வந்தது. சுற்றிலுமுள்ள கல்லூரியில் இருந்து நான்காயிரம் மாணவர்களையும், 500 விளையாட்டு வீரர்களையும் திரட்டினோம். ஆர்ட் டைரக்டர் மோகன் நிஜமான விளையாட்டு போட்டிக்கான அத்தனை வேலைகளையும் செய்தார். இத்தனைக்கும் நடுவில் மும்பையிலிருந்து வந்த வில்லன் அர்பித் ரங்காவோடு ஜெயம் ரவி மோதும் காட்சியை எடுத்தோம். அதை வடிவமைத்தவர் சண்டை இயக்குநர் மிராக்கிள் மைக்கேல்.

ஜெயம் ரவியை ‘சாமி ஆட’ வைத்தீர்களாமே?
வட சென்னையின் கலாசாரத்தை முழுமையாகப் பதிவு பண்ண முடிவு செய்தேன். அங்கு பிரபலமான விஷயம் மசான கொள்ளை. சாமி அருள் வந்து சுடுகாட்டுக்கு போகும் நிகழ்ச்சி. சுடுகாடு செட் போட்டு படம் எடுத்து விட்டு ராயபுரம் அங்காளம்மன் கோயிலில் ஒரிஜினல் மசான கொள்ளையில் ஜெயம் ரவியை ஆட விட்டு படம் பிடித்தோம். அவர் நிஜமாவே சாமி வந்து ஆடியது போல்தான் தெரிந்தது. வேடிக்கை பார்க்க வந்த பெண்கள் அருள் வந்து அவருடன் ஆடியதை அப்படியே படமாக்கினோம். அதே போல மரண கானாவும் வட சென்னை ஸ்பெஷல். அதுவும் படத்தில் இருக்கிறது.

ஹீரோ சப்ஜெக்டில் த்ரிஷாவுக்கு என்ன வேலை?
ஹீரோவுக்கு சமமான ரோல் த்ரிஷாவுக்கு. முரட்டுக்காளையாக திரியும் ஜெயம் ரவியின் பலம் அவருக்குத் தெரியாது. தனது பலம், வீரம் அனைத்தையும் அவர் தெருவில் வீணாக்குவதை பார்த்து மனம் பொறுக்காமல் அதை பக்குவப்படுத்தி பண்படுத்தி சர்வதேச தரத்துக்கு த்ரிஷா உயர்த்துவார். இவர்தான் ரவிக்கு கோச்சர். செட்டில் த்ரிஷாவை லேடி பாக்ஸர் என்றுதான் செல்லமாக அழைப்போம்.

எஸ்.பி.ஜனநாதனோட வசனம் எப்படி?
அவர் இல்லை என்றால் இந்தக் கதையை நான் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. அவர்களோடு வாழ்ந்த அவரது ஒவ்வொரு வரி வசனமும் படத்துக்கு பலம். உண்மையை சொல்வதென்றால் அவர் வசனம் எழுதாமல் இருந்திருந்தால் இது சாதாரண ஆக்ஷன் படமாக ஆகியிருக்கும். அப்படி நிகழாமல் உயிர் கொடுத்திருப்பது அவரது எழுத்துதான்.

படத்தில் ரிலாக்ஸ் ஏரியா இல்லையா?
ஏன் இல்லை? ஜெயம்ரவி முரட்டுத்தனமாகச் செய்யும் காரியம் அனைத்தும் சிரிக்க வைக்கும். பிறகு த்ரிஷாவுடன் கலர் கலராக ஆட்டம் போடுகிறார். வெளிநாட்டு பனிமலையில இரண்டு பேரையும் நனைத்துவிட்டு வரப்போகிறோம். இது போதாதா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum