தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நம்பினால்....நம்புங்கள்..(பாகம்;2)

Go down

நம்பினால்....நம்புங்கள்..(பாகம்;2) Empty நம்பினால்....நம்புங்கள்..(பாகம்;2)

Post  birundha Thu Jan 17, 2013 1:17 pm

1) மேஷம் ராசி: (ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்)

அஸ்வினி,பரணி,கிருத்திகை,நட்சத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கலூக்கும்,
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களூக்கும்,
"" சு,சே,சொ,சை,ல,லீ,லு,லோ,அ,ஆ, இவைகளை முதல் எழுத்தாக கொண்ட பெயர் உடையவர்களூக்கும் இப் பலன் முற்றிலும் பொருந்தும்,


குணாதிசயம்..........இந்த ராசியில் பிறந்தவர்கள் பிறருக்கு சேவை செய்யும் மனப்பான்மைக் கொண்டவர்கள்.திட்டமிட்டபடி வேலைகளை செய்ய நினைப்பீர்கள்.ஒருக் காரியத்தை செய்ய முழுமூச்சுடன் இறங்கிவிட்டால்,அதை எப்படியாவது செய்து முடித்துவிடுவீர்கள்.மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறும் குணம் உங்களுக்கு உண்டு, இதனாலே பலரின் எதிர்ப்புகளூக்கு ஆளாக வேண்டிவரும்.உங்கள் மனபலமே,உங்கள் வாழ்க்கை என்ற ஓடத்தை ஓட்ட துணையாகிறது.



பொதுப்பலன்:-
--------------
இந்த ராகு கேதுப்பலன்கள் உங்களுக்கு அனுகூலமாக இல்லை.அனுசரனையகவும் இல்லை.எதிலும்,பொருமை,நிதானம் தேவை.இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக செயல்படுதல் நன்று.


ராகுப் பெயர்ச்சிப் பலன்கள்:-
-------------------
பெயர்ச்சீயின் பொதுப்பலன் சரியில்லை என்றாலும்,'
இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் இருந்து உங்களை படாத பாடு படுத்திய ராகு பகவன்,உங்களை நட்டாற்றில் தவிக்கவிட்ட ராகு பகவான்,தற்போது 7ம் வீட்டிற்கு வருவதால் திக்கு திசை அறிவீர்கள்.
இப்போது உங்களூக்கே தெரியாமல் உங்களீடம் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரப்போகிறார் ராகுபகவான்.
மன உலைச்சள்,டென்ஷன்,வீண் பிரச்சைகள்,என அல்லல்பட்ட நீங்கள் இனி புது உற்சாகத்துடன் வளம் வரப்போகிறீர்கள்.
களத்தரஸ்தானத்தில் ராகுபகவான் 7ம் இடத்தில் சஞ்சரிப்பதால்,அவப்போது மனைவியுடன் கருத்து மோதல்கள் வந்துப்போகும்.
அதையெல்லாம் பெரிதுப்படுத்தாதீர்கள்.
மனைவிக்கு கர்பப்பைக் கோளாறு,ரத்த அழுத்தம் போன்றவை வந்துப்போகும்,என்னினும் அவை பெரும் தொல்லைகளை தராது.
உங்கள் முடிவை சுயமாக ,நீங்களே சிந்தித்து முடிவெடுங்கள்,நிச்சயம் நீங்கள் தொடங்கிய காரியம் வெற்றி அடையும்.
"வாரிசு இல்லையே", என்று ஏங்கிய தம்பதியர்களூக்கு குழந்தைப் பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.


கேதுப் பெயர்ச்சியின் பலன்கள்:-
-----------------------

இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் நின்று கொண்டு உங்களை பக்குவமில்லாமல் பேச வைத்து பலப் பிரச்சனைகளில் சிக்கவைத்த கேதுபகவான்,இனி உங்களை சமயோசிதப் புத்தியுடன் பேசவைப்பார்.
எப்போதும் ஒருவித தடுமாற்றத்துடனே இருந்த நீங்கள் இனி புது தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
இம்முறை உங்கள் ராசிக்குள்ளே கேது அமர்வதால்,தலைசுற்றல்,காய்ச்சல்,ஒற்றைதலைவலி,முன்கோபம்,வந்து நீங்கும்.
வருமானம் அதிகரித்தாலும் கையிருப்பு பணம் கரையத்தான் செய்யும்,..எனினும் கேது பகவான் உங்களூக்கு பணத்தின் அருமையைப் புரியவைப்பார்.
ஞானகாரகனான கேதுபகவான், உங்களூக்கு ஆத்ம பலத்தையும்,ஆன்மீக பலத்தையும் அதிகப்படுத்துவார்,.வழுக்கி விழப்போகும் நேரங்களீல் உங்களை விழித்து எழச்செய்வார்.
எனினும் ஜென்ம கேது மன அமைதியைக் குறைக்கும் என்பதால்,
அடிபடுதல்,வீட்டைவிட்டு வெளியேருதல்,ஒப்பந்தங்கள் கைநழுவிப்போதல்,குடும்பத்தில் பூசல்கள்,தூக்கம்மின்மை,இவையெல்லம் இருக்கக்கூடும்.
உத்தியோகஸ்தர்களூக்கு தொழில் சற்று மந்தமாகத்தான் இருக்கும்,.

மொத்தத்தில் இந்த ராகு கேதுப் பலன்கள் ஓரளவு அனுகூலமாக ஆரம்பிக்கிறது என்றாலும்,கேள்விக்குறியுடன் துவங்குகிறது.சாதனைகளும்,சோதனைகளூம்,சரிசமமாக இருக்கும்.யோசித்து செய்வதன் மூலம் யோகங்கள் கிட்டும்.
இந்தக்காலக்கட்டம் முற்றிலும் சரியில்லை என்றும் கூறமுடியாது.
காற்றினால் திறந்து மூடிக்கொள்ளும் கதவினைப்போல நல்லதும்,கெட்டதும்,மாறி மாறி வரும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஓரளவு நன்மைகளையே தரும்.சொத்துக்கள் வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.உடன்பிறப்புகளால் நன்மைகள் வந்து சேரும்.நீண்ட நாட்களாக நின்றுப்போன கட்டிடப்பணிகள் தொடர்ந்து நடக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு,[/color]யோசித்து செயல்பட்டால் யோகங்கள் கிட்டிடும்.சேமிப்பு உர வாய்ப்புண்டு.தொடர் கதையாக வந்த கடன் சுமைக் குறையும்.
ஆரோக்கியம் உருவாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு,கேதுப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களை தரும்.கல்வி ,திருமண முயற்சிகளுக்கு உதவிகள் கிட்டும்.கடல்கடந்துப்போக வாய்ப்புக்கள் உருவாகும்.


(மேலேக் கூறப்பட்ட பலன்கள் யாவும் ஜோதிடம் என்ற அறிவியல் கலையை மையமாகக் கொண்டு,மனிதனால் கணிக்கப்பட்டவை.இவற்றையெல்லம் மாற்றியமைக்க இறைவன் என்ற ஓர் மகாசக்தி உள்ளது,.மேலும் நமது தன்னம்பிக்கையும்,முயற்சியும்,நிச்சயம் நன்மை தரும்.)


பரிகாராங்கள்';-
-------------

இந்த ராசிக்காரர்கள்,
உளுந்து கொள்ளு இவற்றை ஒரு கலர் துணியில் கொட்டி ,அதை பூஜை அறையில் 21 நாட்களுக்கு வைத்துவிடுங்கள்."

"" ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே..
நாகராஜாய தீமஹி
தன்னோனந்தஹ் ப்ரசோதயாத் ""
என்ற ராகுபகவான் காயத்ரி மந்திரத்தையும்,

""ஓம் கேதுக்ரஹாய வித்மஹே
மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்""
என்ற கேதுபகவான் காயத்ரி மந்திரத்தையும்,,,,,

தினம் 9முறை என,21நாட்களுக்கு கூறி ஜெபிக்கவும்.
தினசரி பூஜையின் போது கற்கண்டு வைத்துப் படைக்கவும்.
21நாட்கள் முடிந்ததும், உளுந்து கொள்ளு இவற்றை அந்தத்துணியுடன் எடுத்து, அதை மூட்டைக்கட்டுங்கள்.பின் அதன் நுனியில் திரிப்போல் துணியை கசக்கி, அதைக்கொண்டு ,அகல்விளக்கில் எண்ணை ஊற்றி விளக்கேற்றிவிடுங்கள்.
அந்த விளக்கினை ராகுகேதுவிற்கு ஏற்றவேண்டும்/.
ஏதேனும் சிவன் கோவிலில் உள்ள நவக்கிரஹ சந்நிதானத்தில். ஏற்றினாலே...போதுமானது.


பூஜையை செய்யத்தொடங்கும்முன் தடங்கல்கள் வரலாம்.செய்துக்கொண்டிருக்கும்போது கூட தடங்கல் வரலாம்,,அதற்கெல்லாம் கவலைப்படாமல்,,,ஓரிரு நாட்கள் இடையே விட்டுப்போனாலும்,21நாட்கள் கணக்கு வைத்து பூஜையை முடித்து விடுங்கள்.


சம்மந்தப்பட்டவர்கள் செய்யமுடியவில்லை எனில்,அவர்களது,பெற்றோர்,மனைவி,கணவன்,இந்த உறவுமுறையில் உள்ளவர்கள் ,அவர்களுக்காக இந்தப்பூஜையை செய்யலாம்.
தனக்கென பூஜையைப் பெறுப்போர்க்கும் தன் உறவுக்காரருக்கு,பரிகாரம் செய்யவேண்டிய நபர்,11ரூபாயை தட்சிணையாக தந்துவிடவேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum