தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓங்கி உயர்ந்த யோக சனீஸ்வரர்

Go down

ஓங்கி உயர்ந்த யோக சனீஸ்வரர் Empty ஓங்கி உயர்ந்த யோக சனீஸ்வரர்

Post  gandhimathi Thu Jan 17, 2013 1:11 pm


மனிதனுக்கு நல்லதும், கெட்டதும் நவக்கிரகங்களின் பார்வையின் பலனை பொறுத்தே அமைகிறது. அதிலும் சனீஸ்வர பகவானின் பார்வை தீராத கஷ்டங்களை தருவது. சனீஸ்வர பகவானின் கேடு விளைவிக்கும் பார்வையை குறிப்பிடும் வகையில், `ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி' என்ற வழக்கு மொழியும் உண்டு.

மனிதனை விடாது துரத்தி வரும் துன்பங்கள் நீங்கவும், வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும் சனீஸ்வர பகவானின் வழிபாடு மிகவும் முக்கியமானது. அத்தகைய சிறப்பு மிக்க தலமாக விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்பட்டு என்ற கிராமத்தில் சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் சனீஸ் வரருக்கு 21 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தென்னகத்தில் பெரிய சனீஸ்வரன் சிலை இதுதான் என்பது சிறப்புக்குரியது. நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான், இடது காலை பீடத்தில் ஊன்றியும், வலது காலை தனது வாகனமான காகத்தின் மீதும் வைத்துள்ளார்.

இவருக்கு `யோக சனீஸ்வரன்' என்று பெயர். சனீஸ்வரரின் சன்னதிக்கு மேல் கோபுரம் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த கோபுரத்தில் ஒன்பது கலசங்கள் உள்ளது. இவற்றை பக்தர்கள் நவக்கிரக கலசங்கள் என்று அழைக்கின்றனர்
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum