தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுவைமிகு இலங்கை கடலைப் பருப்பு வடை!

Go down

சுவைமிகு இலங்கை கடலைப் பருப்பு வடை! Empty சுவைமிகு இலங்கை கடலைப் பருப்பு வடை!

Post  meenu Tue Mar 12, 2013 12:13 pm


Published On: Mon, Feb 25th, 2013
சமையல் | By admin
சுவைமிகு இலங்கை கடலைப் பருப்பு வடை!


16


images (3)தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – ஒரு சுண்டு
பெருஞ்சீரகம் – (1- 2) மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம் (சிறியதுண்டுகளாக வெட்டியது) – ஒன்று
செத்தல் மிளகாய் (சிறியதுண்டுகளாக வெட்டியது) – 5
கறிவேப்பிலை (வெட்டியது) – சிறிதளவு
உள்ளி(அரைத்த விழுது) – 2 பல்
இஞ்சி(அரைத்த விழுது) – சிறியதுண்டு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை

ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு அதன் மேல் ஒரளவு கொதித்த நீரை (நகச்சூடு)விடவும் (கடலைப் பருப்பை விட தண்ணீர் கூடுதலாக இருக்கவேண்டும்).

பின்பு அதை( 1 – 2)மணி நேரம் ஊறவிடவும். கடலைப்பருப்பு ஊறியபின்பு கடலைப்பருப்பில் உள்ள தண்ணீரை வடித்து விடவும்.

தண்ணீர் வடித்து விட்ட பின்புகடலைப்பருப்பை எடுத்து மூன்றாக பிரித்து மூன்று பாத்திரத்தில் போடவும்(முதலாவது பாத்திரத்தில் கொஞ்சமாகவும், இரண்டாவது மூன்றாவது ஆகிய பாத்திரங்களில் முதலாவதின் இரண்டு மடங்காகவும்).

இரண்டாவது பாத்திரத்தில் உள்ள கடலைப்பருப்பை எடுத்து அதனை கிரைண்டரில் (மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும் (நன்றாக அரைக்ககூடாது)(அதிகளவு தண்ணீர் சேர்க்ககூடாது).

அரைத்த கடலைப்பருப்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். அதன் பின்பு மூன்றாவது பாத்திரத்தில் உள்ள கடலைப் பருப்பை எடுத்து அதனை கிரைண்டரில்(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்)(தடிப்பான பசை போல).

பின்பு அதனுடன் உப்பைசேர்த்து அரைக்கவும் சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக கலக்காது).

அதன் பின்பு மூன்றாவதாக அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் போடவும். பின்பு மூன்றாவதாக அரைத்த கடலைப்பருப்பு உள்ள பாத்திரத்தில் அதனுடன் இரண்டாவதாக அரைத்த கடலை பருப்பை போட்டு நன்றாக கலக்கவும்.

கலந்த பின்பு அதனுடன் முதலாவதாக எடுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பை போட்டு நன்றாக கலக்கவும்.

இவையாவற்றையும் நன்றாக கலந்தபின்பு இதனுடன் சிறியசிறிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, (நசுக்கிய)உள்ளி(பூண்டு),(நசுக்கிய)இஞ்சி, பெருஞ்சீரகம்(fennel), கடுகு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

கலந்தபின்பு அடுப்பில்தாட்சியை(வாணலியை)வைத்து அதில் அரைவாசிக்கு எண்ணெய்விட்டு நன்றாக கொதிக்கவிடவும்.

அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கையில் எடுத்து அதை ஓரளவு உருண்டையாக்கி அதை கையின் நடுப்பகுதியில் வைத்து ஓரளவு தட்டவும்.

கொதித்த எண்ணெயில் செய்த வடையை போடவும் இதே போல் கொஞ்ச வடைகளை செய்து போட்டு ஓரளவு மஞ்சள் நிறமாக பொரிக்கவும்.

பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை வடித்து விட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் மூடிவைக்கவும்(வடையின் உட்பகுதி நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால் வடையின் உட்பகுதி நன்றாக அவியாது).

அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும் கொதித்த எண்ணெயில் போட்டு நல்ல பொன்னிறமாக பொரிக்கவும்.

அதன் பின்பு வடைகளில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

அதன் பின்பு சத்தான சுவையான இலங்கை கடலை வடை தயாராகிவிடும்.

பின்பு அதை எடுத்து ஒருசிறிய தட்டில் வைத்து சட்னியுடன் அல்லது துவையலுடன் பரிமாறவும்.

meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum