தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போலி சினிமா வாய்ப்புகளை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம்: சசிகுமார் அறிவிப்பு

Go down

போலி சினிமா வாய்ப்புகளை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம்: சசிகுமார் அறிவிப்பு  Empty போலி சினிமா வாய்ப்புகளை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம்: சசிகுமார் அறிவிப்பு

Post  ishwarya Tue Mar 12, 2013 11:57 am

என்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தி சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக வெளியாகும் செய்திகள் அல்லது நபர்களை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம் என்று இயக்குநரும் நடிகருமான எம் சசிகுமார் அறிவித்துள்ளார். சசிகுமாரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாகச் சொல்லி, போலி இமெயில் முகவரிகளை வைத்தும், வலைத் தளங்களை வைத்தும் சிலர் மோசடி செய்து வருகிறார்கள். இதுகுறித்து சசிகுமார் கூறியுள்ளது "சினிமா என்ற பிரமாண்ட உலகை நோக்கி நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் என் பெயரைச் சொல்லி சிலர், சினிமா வாய்ப்புத் தருவதாக போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். எப்போதுமே என்னுடைய படங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது நேரடியாக என்னுடைய அலுவலகத்திற்கே அழைத்துப் பேசுவதுதான் வழக்கம். போனிலோ, இமெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் வழக்கம் கிடையாது. என் பெயரில் போலி இமெயில் முகவரிகளையும், பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளையும் சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள். இதுநாள் வரை எந்த சமூக வலைத்தளங்களிலும் நான் இல்லை. அதனால் வலைத்தளத் தகவல்களையோ, இமெயில்களை வைத்தோ என் படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக சொல்லப்படுவதை யாரும் நம்ப வேண்டாம். குறிப்பாக சினிமாவை நோக்கி வரும் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காரணம் சினிமா உலகம் எந்த அளவுக்கு அழகானதோ, அதே அளவுக்கு ஆபத்தானதும கூட. சினிமாவை நோக்கி வருபவர்கள் ஜெயிக்கிறார்களோ, இல்லை போராடுகிறார்களோ, எந்த விதத்திலும் அவர்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என நினைப்பவன் நான். என்னுடைய பெயரை வைத்தே சிலர் ஏமாற்று வலை விரிப்பது, எனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. என் பெயரை மட்டுமல்ல, வேறு யார் பெயரைச் சொல்லி வாய்ப்பு தருவதாகக் கூறி வலை விரித்தாலும் அதுகுறித்து தீர விசாரியுங்கள் என்பதே என் வேண்டுகோள். சினிமாவில் பெண்களின் சாதிப்புகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கு ஆர்வமும் அவசரமும் மட்டுமே இருந்தால் போதாது, ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும் இருக்க வேண்டும்," என கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum