தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோலிவுட்டில் அதிகமாகும் பார்ட்,2 மோகம்

Go down

கோலிவுட்டில் அதிகமாகும் பார்ட்,2 மோகம்  Empty கோலிவுட்டில் அதிகமாகும் பார்ட்,2 மோகம்

Post  ishwarya Tue Mar 12, 2013 11:33 am

சென்னை : ரிலீஸ் ஆன படத்தின் கதாபாத்திரங்களைக் கொண்டு முதல் படத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது வேறு கதையையோ இயக்கினால் அது ‘பார்ட்,2’ படம் எனப்படுகிறது. இந்த பார்முலா ஹாலிவுட் சினிமாவில் 50 வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. ஜேம்ஸ்பாண்ட், ஹாரி பாட்டர், ஸ்பைடர்மேன் உட்பட பல படங்கள் பல பார்ட்கள் வந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியில் இந்த பார்முலா அறிமுகமானது. தமிழ் சினிமாவில் இதற்கு முன் சில முயற்சிகள் நடந்தாலும் இப்போதுதான் ‘பார்ட்,2‘ சீசன் களைகட்டியிருக்கிறது.

ஒரிஜினல் ‘பில்லா’வை அப்படியே ரீமேக் செய்தார் விஷ்ணுவர்தன். பின்னர் ‘பில்லா,2’ உருவானது. பில்லா எப்படி உருவானான் என்கிற கதையோடு அதன் இரண்டாம் பாகத்தை சக்ரி இயக்கினார். இது வெற்றி பெறாவிட்டாலும் இப்போது பார்ட்,2 சீசன் துவங்கி விட்டது. ‘விஸ்வரூபம்’ படத்தை எடுத்தபோதே கமல் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து விட்டதாகக் கூறப்படுகிறது. சில காட்சிகள் மட்டும் எடுத்து அதை இணைத்து விரைவில் ‘விஸ்வரூபம் பார்ட்,2’ வெளிவரும் என்று தெரிகிறது. இயக்குனர் ஹரி தனது, ‘சிங்கம்’ படத்தின் பார்ட்,2வை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

சூர்யா அதே போலீஸ் அதிகாரி கேரக்டரில் தொடர்கிறார். இதில் அவர் சந்திக்கும் சவால்கள் வேறு. தனது ‘அமைதிப்படை’யின் இரண்டாம் பாகத்தை மணிவண்ணன் ‘நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ’ என்ற பெயரில் இயக்கி வருகிறார். சத்யராஜும், மணிவண்ணனும் அதே கேரக்டரில் நடிக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் ‘முனி’ படத்தை எடுத்தார். ஒரு பவர்புல் ஆவி, நோஞ்சான் உடம்பில் புகுந்து கொண்டு வில்லன்களை அழிப்பதுதான் இதன் பார்முலா. முதல் முனியில் ராஜ்கிரண் அந்த பவர்புல் முனியாக நடித்தார். முனி,2வை ‘காஞ்சனா’ என்ற பெயரில் எடுத்தார். இதில் பவர்புல் ஆவி சரத்குமார்.

இப்போது முனி,3 எடுத்து வருகிறார் இதிலும் அதே பார்முலாதான். சமீபத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த ‘பீட்சா’ வின் இரண்டாம் பாகம் தயாராகிறது. ‘பீட்சா’ படத்தின் கடைசி காட்சியில் வரும் நிஜபேய் அடுத்து என்ன செய்கிறது என்பது இரண்டாம் பாகக் கதை. இதுதவிர இன்னும் பல படங்கள் இரண்டாம் பாகமாக வெளிவரப்போவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

பலத்த வரவேற்பை பெற்ற ‘ஆட்டோகிராப் பார்ட்,2‘ இயக்கப் போகிறேன் என்பதை சேரன் சில வருடங்களுக்கு முன்பே அறிவித்து விட்டார். இப்போதுதான் நடிகர், நடிகைகள் முடிவாகி வருகிறார்கள். மெகா ஹிட்டான வடிவேலுவின் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’யின் பார்ட்,2 கதையை எழுதி முடித்து விட்டார் சிம்புதேவன். ‘ஆதிபகவன்’ இரண்டாம் பாகம் வெளிவரும் என்று மலேசியாவில் அமீர் அறிவித்திருக்கிறார்.

‘முகமூடி’ வரவேற்பை பெறாவிட்டாலும் ‘முகமூடி,2’வை இயக்கி வெற்றி பெறுவேன் என்று கூறியிருக்கிறார் மிஷ்கின். ‘ஒன்பதுல குரு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக அதன் இயக்குனர் அறிவித்திருக்கிறார். இவை தவிர அறிவிக்கப்படாமல் பல ‘பார்ட்,2’ முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஹாலிவுட் போன்று பார்ட்,2 பார்முலா இங்கு வெற்றி பெறுமா என்பது அடுத்து வெளிவரும் படங்களின் வெற்றியை பொறுத்தே இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum