தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஊக்க மருந்து பரிசோதனையில் பல்கேரிய வீரர் தோல்வி

Go down

ஊக்க மருந்து பரிசோதனையில் பல்கேரிய வீரர் தோல்வி Empty ஊக்க மருந்து பரிசோதனையில் பல்கேரிய வீரர் தோல்வி

Post  meenu Mon Mar 11, 2013 1:55 pm

லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து அல்பேனிய நாட்டின் எடை தூக்கும் வீரர் ஹைசன் புலாக்கு வெளியேற்றப்பட்டுள்ளார்.

19 வயதாகும் அந்த வீரரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தான ஸ்டனசொலாலை புலாக்கு பயன்படுத்தியிருந்தது தெரியவந்ததை அடுத்து அவர் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழலில் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவில் அவர் பங்குபெறவிருந்தார்.

இது குறித்த மேல்முறையீட்டை தாங்கள் செய்யப் போவதில்லை என்று அவரது பயிற்சியாளரும் மாமாவுமான சமி புலாக்கு தெரிவித்துள்ளார்.

இவர் வெளியேற்றப்பட்டுள்ளது லண்டன் வந்துள்ள அனைத்து வீரர்களுக்கு ஒரு கடுமையான செய்தியை வெளிப்படுத்தும் என்று சர்வதே ஒலிம்பிக் கமிட்டியின்( ஐ ஓ சி ) ஊடக இயக்குநர் மார்க் ஆடம்ஸ் கூறுகிறார்.

லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளின் போது, சுமார் ஐயாயிரம் பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்படும் எனவும், அதனால் யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஒலிம்பிக் காலம் ஜூலை மாதம் 16 ஆம் தேதி தொடங்கியதிலிருந்து இதுவரை ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பில் 1001 பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஐ ஓ சி தெரிவித்துள்ளது.

கிரேக்கத்தைச் சேர்ந்த உலக உள்ளரங்கு உயரம் தாண்டும் சாம்பியன் டிமிட்ரிஸ் சொண்ட்ரொகௌகிஸும் இதே ஊக்க மருந்தை பயன்படுத்தியிருந்ததை அடுத்து வியாழக்கிழமை தாமாகவே போட்டியிலிருந்து விலகினார்.

1988 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் போட்டியில் வென்ற கனடாவின் பென் ஜான்சன் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் ஸ்டெனசொலால் ஊக்க மருந்தை பயன்படுத்தியிருந்து தெரியவந்ததுமே காரணம் என்பதும் குறிப்பிடத்தகுந்த்து
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum