தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உணவு செரியாமை

Go down

உணவு செரியாமை  Empty உணவு செரியாமை

Post  oviya Sun Mar 10, 2013 9:43 am

உணவு செரியாமை:

ஒருவருக்கு இந்த உலகத்தில் மிக அவசியமான தேவை உணவு.எந்த உணவை எந்த நேரத்தில் உண்ண வேண்டும் என்பதையும்,எந்த உடலுக்கு எந்த உணவு ஏற்றுக் கொள்ளும் என்பதையும் தவிர்த்து,ஒத்துக்கொள்ளாத உணவு ஏற்கும் சமயம் செரியாமை உண்டாகிறது.

காரணங்கள்:

உணவு செரிக்காமல் போவதற்கு வயிற்றில் வாய்வு தோஷம் கூடுதல்,வயிற்று உப்புசம் மற்றும் கிருமிகளினாலும்,சரியான நேரத்தில் சரியான உணவு உட்கொள்ளாமல் அகால நேரத்தில் உணவு உட்கொள்வதாலும் காரணமாக இருக்கிறது.

குறிகுணங்கள்:

உண்ட உணவு செரிக்காததால்,வாயில் துர்நாற்றம்,வாயில் கசப்பு,நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வு,வயிற்றில் இரைச்சல்,வயிறு உப்புதல்,வாயில் உப்பு நீர் சுரத்தல்,விக்கல்,ஏப்பம்,வயிற்றில் வலி,வயிற்று எரிச்சல்,மார்பில் எரிச்சல் போன்ற குறிகளை உண்டாக்கும்.தீவிர நிலையில் நாற்றத்துடன் குமட்டல்,வாந்தி,பேதி,உடல் வரள்தல்,மயக்கம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.

1.வாய்வு அஜீரணம்:

வாய்வு மேலோங்கி இந்த நோய் உண்டாகிறது.உட்கொண்ட உணவு செரிக்காமல் துர்நாற்றத்துடன் வாந்தி வருதலும்,வயிற்று உப்புசம்,பேதியாதல்,வயிற்றில் இரைச்சல் சப்தம்,மயக்கம்,மூச்சுத்திணறல் போன்ற குறிகள் எல்லாம் வாய்வு செரியாமையைக் காட்டும்.

2.பித்த அஜீரணம்:

தன் உடலுக்கு ஒவ்வாத உணவு,பித்தத்தை உபரியாக்கும் உணவு,வறண்டு புளித்த உணவுகள்,பழைய உணவுகள் ஆகியவை பித்த நீர் அதிகமாக சுரந்து,வாய் நீர் ஊறுதல்,புளித்த ஏப்பம்,உடல் எரிச்சல்,கழுத்தில் வியர்வை,உதடு,நாக்கு துடித்தல் போன்ற குறிகள் பித்த செரியாமையை காட்டும்.

3.கப அஜீரணம்:

வாயில் நீர் ஊறல்,வாய் வழவழப்பாதல்,தொண்டையில் கபம் கட்டுதல்,உண்டது போன்ற உணர்வு,கபத்துடன் கோழையாக வாந்தி எடுத்தல்,இருமல்,மேல் மூச்சு வாங்குதல் போன்றவை கப அஜீரணத்தால் உண்டாகிறது.

4.மூன்று தோஷங்களும் ஒன்றாகக் கலத்தல்:

மூன்று தோஷங்களால் வரும் அஜீரணம்,மனதில் பயத்தை உண்டாக்கும்.ஆகாரத்தை வாந்தி எடுக்கச் செய்யும்.மயக்கம்,உணவில் வெறுப்பு,அடிக்கடி நீர் அருந்துதல்,கறுப்பு நிறத்தில் பேதியாதல்,கண்களை உருட்டி விழித்தல் போன்ற குணங்களை உடையது.

மருந்து 1:பஞ்ச தீபாக்னி சூரணம்


தேவையானப் பொருட்கள்:

சுக்கு=10 கிராம்.
மிளகு=10 கிராம்.
திப்பிலி=10 கிராம்.
ஏல அரிசி=10 கிராம்.
சீரகம்=10 கிராம்.
சர்க்கரை=50 கிராம்.

செய்முறை:

சர்க்கரையைத் தவிர மற்றப் பொருள்களை சுத்தம் செய்து,வெயிலில் காய வைத்து இடித்து,பொடித்து மெல்லிய சல்லடையில் சலித்து,பின்னர் சர்க்கரையையும் பொடித்து அத்துடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

அரை முதல் ஒரு டீஸ்பூன் அளவு தேனுடன் அல்லது நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

தீரும் நோய்கள்:

வாய்வு,பசியின்மை,அஜீரணம்,உடல்வலி ஆகியவை குறையும்.



மருந்து 2: சாதிக்காய் சூரணம்

சாதிக்காய்(நெய்யில் வறுத்தது)=20 கிராம்.
சீரகம்=20 கிராம்.
சிறு நாகப்பூ=20 கிராம்.
கிராம்பு=20 கிராம்.
வெங்காயம்(பொரித்து)=20 கிராம்.

செய்முறை:

வெங்காயத்தை நன்றாகப் பூப்போல் பொரித்து,மற்றச் சரக்குகளை வெயிலில் காயவைத்து,இடித்துப் பொடித்து,சலித்துக் கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

கால் முதல் அரை டீஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு இரண்டு வேளை தேன் அல்லது மோருடன் சாப்பிடவும்.

தீரும் நோய்கள்:

அஜீரணம்,பேதி,கிரகணி ஆகியவை குறையும்.



மருந்து 3:இஞ்சி சூரணம்

தேவையானப் பொருட்கள்:

தோல் சீவிய இஞ்சி=400 கிராம்.
சீரகம்=200 கிராம்.
கொத்தமல்லி விதை=200 கிராம்.
இந்துப்பு=100 கிராம்.
எலுமிச்சம் பழச்சாறு=900 மி.லி.

செய்முறை:

இஞ்சியை வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.மற்றப் பொருள்களை எல்லாம் சுத்தம் செய்து,நன்றாக இடித்து,பொடித்து சலித்து சூரணமாக செய்து அதனுடன் எலுமிச்சை சாறு விட்டு,தினசரி வெயிலில் காய வைத்து,காய்ந்த பிறகு மீண்டும் இடித்து சலித்து வைத்துக் கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

அரை முதல் ஒரு டீஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு இரு வேளை வெந்நீருடன் சாப்பிட வேண்டும்.

தீரும் நோய்கள்:

வயிற்றுவலி,பசியின்மை,அஜீரணம்,தலைசுற்றல் ஆகியவை குறையும்.



மருந்து 4:சீரக லேகியம்

தேவையானப் பொருட்கள்:

ஏல அரிசி=50 கிராம்.
ஓமம்=100 கிராம்.
திப்பிலி=200 கிராம்.
சீரகம்=400 கிராம்.
வெல்லம்=2 கிலோ.
தேன்=200 கிராம்.
நெய்=400 கிராம்.

செய்முறை:

ஏல அரிசி,ஓமம்,திப்பிலி மற்றும் சீரகம் ஆகியவற்றை சுத்தம் செய்து,வெயிலில் காய வைத்து இடித்து,பொடித்து மெல்லிய சல்லடையில் சலித்து,பின்னர் வெல்லத்தை தட்டி போதிய அளவு தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து சூடாக்கி வெல்லம் கரைந்த பிறகு வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து,பாகு பதத்தில் வரும் பொது சூரணத்தை சிறுகச் சிறுகப் போட்டுக் கிளறவும்.பிறகு நெய் கலக்கவும்.ஆறிய பிறகு தேன் சேர்க்கவும்.

உபயோகிக்கும் முறை:

5-10 கிராம் அளவு ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிட வேண்டும்.

தீரும் நோய்கள்:

வயிற்றுவலி,பசியின்மை,ருசியின்மை,வாய்க்கசப்பு,அஜீரணம்,பேதி,மலக்கட்டு,சோகை ஆகியவை குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum