தேனீக்கள் தரும் பாடம்
Page 1 of 1
தேனீக்கள் தரும் பாடம்
தேனீக்களைப் பற்றி திருக்குர்ஆனில் ஓர் அழகான வசனம் உண்டு. தேனீக்களை அழைத்து இறைவனே கூறுவதுபோல அந்தத் திருவசனம் இடம்
பெற்றுள்ளது: இறைவன் தேனீக்கு இவ்வாறு செய்தி (வஹீ) அறிவித்தான்: ‘‘மலைகளிலும் மரங்களிலும் பந்தல்களில் படரும் கொடிகளிலும் நீ கூடுகளைக் கட்டிக்கொள். மேலும் பலதரப்பட்ட மலர்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக்கொள். உன் இறைவன் சீராக அமைத்துத் தந்த வழியில் சென்று கொண்டிரு.’’ (குர்ஆன் 16:68)இந்த வசனத்தின் அடிப்படையில் தேனீக்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் தேனீக்களின் ஒவ்வொரு செயலும் நமக்கு அழகான செய்திகளைச் சொல்வதைப் புரிந்து கொள்ளலாம்.
தேன் நிறைந்த மலர்களைத் தேடி தேனீக்கள் வெகுதொலைவு பறந்து செல்கின்றன. ஒரு பவுண்டு தேனுக்காக இருபது லட்சம் மலர்களில் அமர்ந்து சாற்றை உறிஞ்ச வேண்டும். இதற்காக 50,000 மைல்கள் பறந்தாக வேண்டும். இப்படிச் சேகரிக்கப்படும் ‘மலர்ச்சாறு’ முழுவதும் தேன் ஆகிவிடுகிறதா என்றால் அதுதான் இல்லை.போதிய அளவு மலர்ச்சாறு சேர்ந்ததும் அதனைத் தேனாக மாற்றும் பணியில் தேனீக்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றன. ஆயிரக்கணக்கான தேனீக்கள் தங்கள் சிறகுகளை அசைத்து அசைத்து விசுறுகின்றன. இதனால் மலர்ச்சாற்றில் உள்ள அதிகப்படியான தண்ணீர் ஆவியாகிவிடுகிறது. இப்பொழுது சுத்தமான தேன் ரெடி. இதனை தேனீக்கள் மீண்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு தங்கள் கூடுகளில் உள்ள துளைகள் போன்ற சிறுசிறு அறைகளில் சேமித்து வைக்கின்றன. பிறகு தூசி, துரும்புகள் விழுந்திடா வண்ணம் அந்தத் துளைகளையும் மூடிவிடுகின்றன.
இப்படி இயற்கையான முறையில் பாதுகாக்கப்பட்ட தூய்மையான தேனை மனிதன் எளிதாகப் பெற்றுக்கொள்கிறான்! இறைவன் நினைத்திருந்தால் எடுத்த எடுப்பிலேயே தேனைப் படைத்திருக்க முடியும்; அல்லது ஒவ்வோர் ஊரிலும் சிறுசிறு தேனாறுகளை ஓடவைத்திருக்க முடியும். அதற்குரிய வலிமை இருந்தும் இறைவன் அப்படிச் செய்யவில்லை. தன்னுடைய மிக உயர்ந்த படைப்பான மனிதன், தேனைச் சுவைப்பதோடு நின்றுவிடாமல், அந்தத் தேனீக்களிடமிருந்து படிப்பினையையும் பெறவேண்டும் என்பதும் இறைவனின் நோக்கமாக இருக்கலாம்.
தேனீக்களின் செயல்பாட்டை இரண்டே வார்த்தைகளில் இப்படி வர்ணிக்கலாம்: ‘திட்டமிட்ட செயல்.’இதுதான் தேனீக்களுக்கு இறைவன் அமைத்துத் தந்த சீரான பாதை.மனிதனுக்கும் ஒரு நேரான பாதையை இறைவன் தன் வேதத்தின் மூலம் அருளியுள்ளான். ஆனால் அந்தத் தேனீக்களுக்கு இருக்கும் விவேகமும் கீழ்ப்படியும் தன்மையும்கூட மனிதனிடம் இல்லையே. என்ன செய்வது?
பெற்றுள்ளது: இறைவன் தேனீக்கு இவ்வாறு செய்தி (வஹீ) அறிவித்தான்: ‘‘மலைகளிலும் மரங்களிலும் பந்தல்களில் படரும் கொடிகளிலும் நீ கூடுகளைக் கட்டிக்கொள். மேலும் பலதரப்பட்ட மலர்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக்கொள். உன் இறைவன் சீராக அமைத்துத் தந்த வழியில் சென்று கொண்டிரு.’’ (குர்ஆன் 16:68)இந்த வசனத்தின் அடிப்படையில் தேனீக்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் தேனீக்களின் ஒவ்வொரு செயலும் நமக்கு அழகான செய்திகளைச் சொல்வதைப் புரிந்து கொள்ளலாம்.
தேன் நிறைந்த மலர்களைத் தேடி தேனீக்கள் வெகுதொலைவு பறந்து செல்கின்றன. ஒரு பவுண்டு தேனுக்காக இருபது லட்சம் மலர்களில் அமர்ந்து சாற்றை உறிஞ்ச வேண்டும். இதற்காக 50,000 மைல்கள் பறந்தாக வேண்டும். இப்படிச் சேகரிக்கப்படும் ‘மலர்ச்சாறு’ முழுவதும் தேன் ஆகிவிடுகிறதா என்றால் அதுதான் இல்லை.போதிய அளவு மலர்ச்சாறு சேர்ந்ததும் அதனைத் தேனாக மாற்றும் பணியில் தேனீக்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றன. ஆயிரக்கணக்கான தேனீக்கள் தங்கள் சிறகுகளை அசைத்து அசைத்து விசுறுகின்றன. இதனால் மலர்ச்சாற்றில் உள்ள அதிகப்படியான தண்ணீர் ஆவியாகிவிடுகிறது. இப்பொழுது சுத்தமான தேன் ரெடி. இதனை தேனீக்கள் மீண்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு தங்கள் கூடுகளில் உள்ள துளைகள் போன்ற சிறுசிறு அறைகளில் சேமித்து வைக்கின்றன. பிறகு தூசி, துரும்புகள் விழுந்திடா வண்ணம் அந்தத் துளைகளையும் மூடிவிடுகின்றன.
இப்படி இயற்கையான முறையில் பாதுகாக்கப்பட்ட தூய்மையான தேனை மனிதன் எளிதாகப் பெற்றுக்கொள்கிறான்! இறைவன் நினைத்திருந்தால் எடுத்த எடுப்பிலேயே தேனைப் படைத்திருக்க முடியும்; அல்லது ஒவ்வோர் ஊரிலும் சிறுசிறு தேனாறுகளை ஓடவைத்திருக்க முடியும். அதற்குரிய வலிமை இருந்தும் இறைவன் அப்படிச் செய்யவில்லை. தன்னுடைய மிக உயர்ந்த படைப்பான மனிதன், தேனைச் சுவைப்பதோடு நின்றுவிடாமல், அந்தத் தேனீக்களிடமிருந்து படிப்பினையையும் பெறவேண்டும் என்பதும் இறைவனின் நோக்கமாக இருக்கலாம்.
தேனீக்களின் செயல்பாட்டை இரண்டே வார்த்தைகளில் இப்படி வர்ணிக்கலாம்: ‘திட்டமிட்ட செயல்.’இதுதான் தேனீக்களுக்கு இறைவன் அமைத்துத் தந்த சீரான பாதை.மனிதனுக்கும் ஒரு நேரான பாதையை இறைவன் தன் வேதத்தின் மூலம் அருளியுள்ளான். ஆனால் அந்தத் தேனீக்களுக்கு இருக்கும் விவேகமும் கீழ்ப்படியும் தன்மையும்கூட மனிதனிடம் இல்லையே. என்ன செய்வது?
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இயற்கை தரும் பாடம்! (ஆன்மிகம்)
» படிக்காத பாடம்!
» தவறுகளிலிருந்து பாடம் கற்போம்
» தவறுகளிலிருந்து பாடம் கற்போம்
» குருவின் தன்னம்பிக்கை பாடம்!!!
» படிக்காத பாடம்!
» தவறுகளிலிருந்து பாடம் கற்போம்
» தவறுகளிலிருந்து பாடம் கற்போம்
» குருவின் தன்னம்பிக்கை பாடம்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum