தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைமைச் செயலக மாற்றம்: பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்

Go down

தலைமைச் செயலக மாற்றம்: பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் Empty தலைமைச் செயலக மாற்றம்: பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்

Post  meenu Sat Mar 02, 2013 1:10 pm

இந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தனது
அனுமதியின்றி, தமிழக அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட
தலைமைச் செயலகக் கட்டிடத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்ற எடுத்துவரும்
நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.




தலைமைச் செயலக மாற்றம்: பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் 130131132859_tn_new_assembly_complex_512x288_tngovt_nocreditபுதிய தலைமைச் செயலக வளாகம்




ஓமந்தூரார்
தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக
வளாகத்தினை முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி மருத்துவமனையாக மாற்ற
அஇஅதிமுக அரசு முடிவெடுத்துவிட்டதாகக் கூறி வீரமணி என்பவர் பசுமைத்
தீர்ப்பாயத்தில் மனுச்செய்திருக்கிறார்.

அம்மனு தீர்ப்பாயத்தின் சென்னைப் பிரிவின் முன் நிலுவையில் இருக்கிறது.

ஆனால் ஓமந்தூரார் தோட்டத்திலிருந்து மீண்டும்
புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றத்தினையும் தலைமைச் செயலகத்தையும்
மாற்றுவதென்ற அஇஅதிமுக அரசின் முடிவில் தலையிடமுடியாதென வேறொரு வழக்கில்
உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, கடந்த வாரம்தான் ஓமந்தூரார் வளாகத்தில்
புறநோயாளிகள் பிரிவினை அரசு தொடங்கியது.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சென்னைப்
பிரிவு பசுமைத் தீர்ப்பாயத்தின் முன் வீரமணியின் மனு விசாரணைக்கு வந்தபோது,
நீதிபதி சொக்கலிங்கம் மருத்துவமனையாக மாற்ற வழங்கப்பட்ட சுற்றுச்சூழல்
தொடர்பான அனுமதிக்கெதிரான மனு இன்னமும் நிலுவையில் இருக்கும்போது
மருத்துவமனை தொடங்க அவ்வளவு அவசரம் காட்டவேண்டிய அவசியமென்ன என்ன என்று
அரசைக் கடிந்துகொண்டார்.

மேலும் இது குறித்து தமிழக அரசு தனது
நிலைப்பாட்டினை நாளைக்குள் தீர்ப்பாயத்தின் முன்
தெரியப்படுத்தவேண்டுமெனவும் நீதிபதி சொக்கலிங்கம் உத்திரவிட்டார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum