முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவுகளை வழங்குவது உணவு நிறுவனங்களின் பொறுப்பு'
Page 1 of 1
முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவுகளை வழங்குவது உணவு நிறுவனங்களின் பொறுப்பு'
முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவுகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை வர்த்தக நிறுவனங்கள்தான் எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை ஜமயத்துல் உலமா அமைப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பினால் கொழும்பில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதில் உரையாற்றிய அந்த அமைப்பின் ஹலால் பிரிவுக்கான தலைவர் முர்சித் முலாபர் அவர்கள் உணவுப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்த முடியாது என்று கூறியிருப்பதுடன், இது குறித்த பொதுபலசேனை அமைப்பின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை அந்தந்த உணவு விநியோகக் கம்பனிகளே செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த விடயம் அத்தகைய கம்பனிகளுக்கு பிரச்சினைக்குரிய விடயமாகவே இருக்கும் என்கின்ற போதிலும், இதனைச் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கே இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
'ஹலால் சான்றிதழ்களை உலமா சபை நிறுத்த வேண்டும்'
இதற்கிடையே ஜமயத்துல் உலமா சபை இலங்கையில் ஹலால் சான்றிதழ்களை விநியோகிப்பதை நிறுத்த வேண்டும் என்று முஸ்லிம்- தமிழ் ஐக்கிய முன்னணியின் தலைவரான அசாத் அலி கேட்டிருக்கிறார்.
இந்தச் சான்றிதழ்களை நிறுத்துவதால் முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும், ஹலால் உணவுகளை எப்படி பெறுவது என்பதை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள் என்றும், ஆகவே சான்றிதழைப் பார்த்து அவர்கள் ஹலால் உணவுகளை வாங்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
உண்மையில் வெளிநாடுகளுக்கு உணவுகளை விநியோகிக்கின்ற நிறுவனங்களுக்கே இது பிரச்சினை என்றும், ஆகவே அவர்கள் தமக்கு ஹலால் சான்றிதழ் இல்லாததால் பிரச்சினை ஏற்படுமென்றால், அது குறித்து பொதுபல சேனையுடன் பேசிக்கொள்ளட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அந்த அமைப்பினால் கொழும்பில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதில் உரையாற்றிய அந்த அமைப்பின் ஹலால் பிரிவுக்கான தலைவர் முர்சித் முலாபர் அவர்கள் உணவுப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்த முடியாது என்று கூறியிருப்பதுடன், இது குறித்த பொதுபலசேனை அமைப்பின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை அந்தந்த உணவு விநியோகக் கம்பனிகளே செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த விடயம் அத்தகைய கம்பனிகளுக்கு பிரச்சினைக்குரிய விடயமாகவே இருக்கும் என்கின்ற போதிலும், இதனைச் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கே இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
'ஹலால் சான்றிதழ்களை உலமா சபை நிறுத்த வேண்டும்'
இதற்கிடையே ஜமயத்துல் உலமா சபை இலங்கையில் ஹலால் சான்றிதழ்களை விநியோகிப்பதை நிறுத்த வேண்டும் என்று முஸ்லிம்- தமிழ் ஐக்கிய முன்னணியின் தலைவரான அசாத் அலி கேட்டிருக்கிறார்.
இந்தச் சான்றிதழ்களை நிறுத்துவதால் முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும், ஹலால் உணவுகளை எப்படி பெறுவது என்பதை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள் என்றும், ஆகவே சான்றிதழைப் பார்த்து அவர்கள் ஹலால் உணவுகளை வாங்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
உண்மையில் வெளிநாடுகளுக்கு உணவுகளை விநியோகிக்கின்ற நிறுவனங்களுக்கே இது பிரச்சினை என்றும், ஆகவே அவர்கள் தமக்கு ஹலால் சான்றிதழ் இல்லாததால் பிரச்சினை ஏற்படுமென்றால், அது குறித்து பொதுபல சேனையுடன் பேசிக்கொள்ளட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும்'
» கிரகமா பொறுப்பு. இல்லை. சமுதாயம் பொறுப்பு
» வடக்கில் முஸ்லீங்களுக்கு காணி வழங்குவது குறித்து பொதுபல சேனாவை பகிரங்க விவாத்திற்கு வருமாறு அழைக்கும் அமைச்சர் றிசாத்
» அரசே ஹலால் சான்றிதழ் வழங்கட்டும்
» முஸ்லிகளுக்கும் ஹலால் கூடாது' : பொதுபலசேனா
» கிரகமா பொறுப்பு. இல்லை. சமுதாயம் பொறுப்பு
» வடக்கில் முஸ்லீங்களுக்கு காணி வழங்குவது குறித்து பொதுபல சேனாவை பகிரங்க விவாத்திற்கு வருமாறு அழைக்கும் அமைச்சர் றிசாத்
» அரசே ஹலால் சான்றிதழ் வழங்கட்டும்
» முஸ்லிகளுக்கும் ஹலால் கூடாது' : பொதுபலசேனா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum