தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழ‌ந்தை இ‌ல்லாத த‌ம்ப‌திகளு‌க்கு இலவச கல‌ந்தா‌ய்வு

Go down

குழ‌ந்தை இ‌ல்லாத த‌ம்ப‌திகளு‌க்கு இலவச கல‌ந்தா‌ய்வு  Empty குழ‌ந்தை இ‌ல்லாத த‌ம்ப‌திகளு‌க்கு இலவச கல‌ந்தா‌ய்வு

Post  meenu Thu Feb 28, 2013 12:06 pm

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவச கல‌ந்தா‌ய்வு சேவை சென்னை அடையாரில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் தொடங்கியு‌ள்ளது.

சென்னை அடையாரில் உள்ள ஐஸ்வர்யா பெண்கள் நலன் மற்றும் கருத்தரித்தல் மைய மரு‌த்துவமனை‌யி‌ன் ‌நி‌ர்வாக இய‌க்குந‌ர் மரு‌த்துவ‌ர் சந்திரலேகா பேசுகை‌யி‌ல், உலகில் 20 சதவீத தம்பதிகள் குழந்தைகள் இல்லாமல் உள்ளனர். இதனால் அவர்கள் மன உளைச்சல் மேலும் அதிகமாகிறது. பொதுவாக மன உளைச்சல், தூக்கமின்மை, வாழ்க்கை முறையில் மாற்றம், உணவு போன்ற பல்வேறு காரணங்களால் உயிரணு எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமை ஏற்படுகிறது.

அவர்களுக்கு என்ன காரணத்தால் குழந்தைப்பேறு இல்லை என்பதை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்து வருகிறோம். இயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சிக்கிறோம், அதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்கிறோம். கருத்தரிப்பில் 60 முதல் 80 சதவீதமும், குழந்தை பிறப்பில் 40 முதல் 60 சதவீதமும் வெற்றி அடைந்து வருகிறோம்.

உலக குழந்தைப்பேறு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஜுன் மாதம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவசமாக எங்கள் மரு‌த்துவமனை‌யி‌ல் கல‌ந்தா‌ய்வு நடத்துகிறோம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சென்னையில் இந்த விழிப்புணர்வு முகாம் தொடக்க விழா நேற்று சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தலைமையில் நடந்தது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum