தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மஜாஜ்

Go down

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மஜாஜ்       Empty உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மஜாஜ்

Post  ishwarya Wed Feb 27, 2013 2:23 pm

இயற்கை மருத்துவ முறையில் தற்போது ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது மஜாஜ். பழங்காலத்தில் இருந்தே மஜாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது.. இந்தியா சீனா, ரோம் எகிப்து, உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மஜாஜ் நோய் தீர்க்கும் மருத்துவமாக பயன்படுத்தபட்டுள்ளது.

மஜாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு நலம் பயக்கிறது. மஜாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் இணையற்றது. மஜாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைகிறது. இதனால் உடலில் காணப்படும் தீயகழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும்.

மஜாஜ் தசைகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து தசைவலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில் சேரும் லாக்டிக் ஆசிட் சேரும். மஜாஜ், தசைகளில் சேரும் இந்த லாக்டிக் ஆசிட்டுகளை நீக்கி உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும் . மஜாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஒட்டம் அதிகரிக்கும், இதனால் அந்த உடல் உறுப்புகளுக்கு அளவில் உடல் ஊட்டச்சத்து கிடைப்பதுடன் அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும்.

ரத்த ஒட்டம் அதிகரிப்பதால் வீக்கம் போன்றவை குறையும். மஜாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன் மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மஜாஜ் ,நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைப்பதுடன் அவற்றை மென்மையாக்கும். சுறுசுறுப்புடன் செய்யப்படும் மஜாஜ் நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும். வயிற்றில் மஜாஜ் செய்வதால் செரிமான மண்டலம் துண்டபடுவதுடன் வயிற்றில் மஜாஜ் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும்.. மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால் உடலின் நோய் எதிப்பு சக்தியும் அதிகரிக்கும்..

மஜாஜ் செய்வது சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற துண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியில் அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியாகிறது. முறையாக செய்யப்படும் மஜாஜ் இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து அதன் செயல்திறனை அதிகரிக்கிறது. பொதுவாக மஜாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும். ஆனால் உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால் ஈரத்துணிகள் அல்லது மருந்து எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மஜாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மஜாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர்.. இது உகந்தது அல்ல.. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.

காய்ச்சலால் பாதிக்கபட்டிருக்கும் காலங்களில் எவ்வித மஜாஜும் செய்யக்கூடாது..கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப்பகுதியில் மஜாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது. வயிற்றுபோக்கு,வாயுப் பிரச்சனை, அப்பென்டிசைட்டிஸ், சிறுகுடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்சனை உடையவர்கள் வயிற்றில் மஜாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். தோல் வியாதிகளை உடையவர்களுக்கு மஜாஜ் செய்வது பொருத்தமற்றது,.

நீங்கள் மஜாஜ்க்கு பொருத்தம் உடையவர் தானா புரிந்து கொண்டு செயல்படுங்கள். அட நீங்களும் உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்க மஜாஜ்க்கு தயாராகி வீட்டீர்களா-? பேஷ் பேஷ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum