தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மழை காலம் தொடங்கியதால் டெங்கு, சிக்குன் குனியா அபாயம்

Go down

மழை காலம் தொடங்கியதால் டெங்கு, சிக்குன் குனியா அபாயம்  Empty மழை காலம் தொடங்கியதால் டெங்கு, சிக்குன் குனியா அபாயம்

Post  ishwarya Wed Feb 27, 2013 1:29 pm

தமிழகத்தில் மழை காலம் தொடங்குவதால் டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன் குனியாவில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அதன் தாக்கத்தால் தமிழகத்திலும் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால், பூமியில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் டைபாய்டு, மலேரியா, டெங்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் இருமல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளது.

மேலும் மதுரை, நெல்லை, மாவட்டங்களில் ஒரு விதமான மர்ம காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில், சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 20ல் ஆரம்பமாக உள்ளது. மழை காலம் தொடங்கி விட்டால், டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரிக்க தொடங்கிவிடும்.

இதே போல், தமிழகத்தில் தீவிரமாக இருந்த சிக்குன்குனியா ஒழிக்கப்பட்டு விட்டதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. ஆனால், ஆண்டு தோறும் மழைக்காலங்களில் ஆங்காங்கே சிக்குன் குனியாவால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால், டெங்கு மற்றும் சிக்குன் குனியாவில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மூடி இல்லாத பொருட்களில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டாம். சாதாரண கூலரை பயன்படுத்த வேண்டாம். வாட்டர் டேங்க் மற்றும் வாட்டர் ஸ்டோரேஜ் டேங்க்குகளை மூடியே வைக்க வேண்டும். வீடுகளில் கூலரை பயன்படுத்துவோர், ஒவ்வொரு வாரமும் தவறாமல் கூலரில் தண்ணீரை மாற்ற வேண்டும்.

இந்த ஏடிஸ் கொசுக்கள் காலை மற்றும் பகல் நேரங்களிலேயே கடிக்க கூடியது. அதனால், கை மற்றும் கால்கள் தெரியும்படி உடைகளை அணிய வேண்டாம். உடல் முழுவதும் வெளியே தெரியாமல் உடைகளை அணியுங்கள். மேலும், டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன் குனியாவிற்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சிக்குன்குனியா
கடுமையான காய்ச்சல்
கடுமையான மூட்டு வலி
தலைவலி
தோல் சிவப்பு நிறமாக மாறுதல்

டெங்கு
கடுமையான காய்ச்சல்
கடுமையான தலைவலி
முதுகுவலி
கண் வலி
தோல் சிவப்பு நிறமாக மாறுதல்
பல் ஈறு மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வருதல்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum