தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முகத்தில் முகம் பார்க்கலாம்

Go down

முகத்தில் முகம் பார்க்கலாம் Empty முகத்தில் முகம் பார்க்கலாம்

Post  ishwarya Tue Feb 26, 2013 6:06 pm

பருக்கள் போக:
இரத்த சந்தனப் பவுடர் & 1 டீஸ்பூன்
சந்தனத் தூள் & 1 டீஸ்பூன்
வேப்பிலை பவுடர் & கால் டீஸ்பூன்
முல்தானி மெட்டி & 3 டீஸ்பூன்
பன்னீர் & தேவைக்கேற்ப
கலந்து பரு இருக்கும் இடத்தில் மட்டும் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவவும்.
வேப்பிலைப் பொடி, பப்பாளிப் பொடி மற்றும் துளசிப் பொடி மூன்றையும் நீரில் கலந்து, பருக்களின் மீது தடவி வர, அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
சந்தனப் பொடி & 1 டீஸ்பூன்
நெல்லிக்காய் பொடி & 1 டீஸ்பூன்
இவற்றை சிறிதளவு நீரில் குழைத்து பருக்களின் மீது தடவவும். பத்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் ஊறியதும் ஒரு டீஸ்பூன் வேப்பிலைப் பொடி போட்டுக் கொதிக்க வைத்த நீரால் முகம் கழுவவும்.
புதினா சாறு & 5 துளிகள்
துளசி பொடி & 1 டீஸ்பூன்
முல்தானி மெட்டி & 2 டீஸ்பூன்
கலந்து பருக்களின் மேல் தடவவும், 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்கள் மறையும்.
கடலை மாவு & 1 டீஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் தூள் & அரை டீஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு & 3 சொட்டு
கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம்.
அரைத்த சந்தனம் 2 டீஸ்பூனுடன் பன்னீர் சேர்த்துக் கலந்து பருக்கள், மருக்கள் உள்ள இடத்தில் தடவினால் மறைந்து விடும்.
புதினா சாறு & 2 டீஸ்பூன்
பன்னீர் & 1 டீஸ்பூன்
கலந்து பரு இடத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
வேப்பிலைப் பொடி, துளசிப் பொடி சமமாக எடுத்துக் கொண்டு, தண்ணீரில் கலந்து பருக்கள் மீது தடவி வந்தால் குணம் தெரியும்.
பப்பாளிப் பொடி & அரை டீஸ்பூன்
முல்தானி மெட்டி & அரை டீஸ்பூன்
இரண்டையும் காய்ச்சாத பாலில் குழைத்து பருக்களின் மேல் தடவவும். லேசாகக் காய்ந்ததும், மிக மென்மையாக மசாஜ் செய்து கழுவவும். பின் சுத்தமான டர்க்கி டவலால். முகத்தை ஒற்றி எடுக்கவும். டவலின் ஒரு பக்கத்தால் முகத்தின் ஒரு பக்கம் மட்டுமே ஒற்றி எடுக்க வேண்டும்.
துளசிப் பொடி & 1 டீஸ்பூன்
வேப்பிலைப் பொடி & 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு & 5 சொட்டு
இவை கலந்து பருக்களின் மீது தடவி வரலாம். பரு குணமாகி, பரு ஏற்படுத்திய தழும்பையும், கரும்புள்ளிகளையும் கூட போக்கும்.
பருக்கள் பொதுவாக எண்ணெய்ப் பசை சருமத்தில் தான் அதிகமாக வரும். பரம்பரை காரணமாகவும், ஹார்மோன் கோளாறுகளாலும், சத்தான உணவு எடுத்துக் கொள்ளாததாலும் வரும். எனவே,
காய்கறி, பழ வகைகள் நீர் அதிகமாக உட்கொள்ளுங்கள்.
எண்ணெய், கொழுப்பு, மசாலா பொருட்களை தவிருங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum