தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொடுகே என்னருகில் வராதே போ போ...

Go down

பொடுகே என்னருகில் வராதே போ போ... Empty பொடுகே என்னருகில் வராதே போ போ...

Post  ishwarya Tue Feb 26, 2013 5:28 pm

*இன்று முக்கால் வாசி ஆண்களும் பெண்களும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை பொடுகுத் தொல்லைதான்.கூந்தலின் மீது அதிக கவணம் எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனையிலை ஆரம்பத்திலே தடுத்துவிடலாம்.கவனிக்காமல் விட்டால் கூந்தலில் ஒருவித வாடை வரும், அரிப்பு, புண், எரிச்சல், கூந்தல் உதிர்வுகள் ஏற்படும்.

*பொடுகின் ஆரம்ப நிலையில் இருந்து பார்ப்போம்.பொடுகினை இரண்டு வகையாக பிரிக்கலாம் அதில் ஒன்று கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பதது.இன்னென்று எண்ணெய் பசையுடன் இருப்பது.

*முதல் வகையினை கவனிக்காமல் விட்டால் அது சோரியாஸிஸ் போன்ற சரும நேய்கள் வரக்கூடும். இதன் மூலம் நெற்றியில் சின்ன சின்ன பருக்கள் வந்து உங்கள் முக அழகையும் கொடுக்கும்.

*இரண்டாம் வகையின் மூலம் உங்கள் கூந்தல் அதிகமாக உதிர்வு ஏற்படும். தலையில் ஒரு வித துர்நாற்றம் வரும். இதன் மூலம் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக தெரிந்து அழகை கெடுக்கும்.

பொடுகுவர காரணங்கள்:

*பொடுகுவர முக்கிய காரனம் ஹார்மோன் கோளாறுகள், கூந்தலில் சரியில்லாத பராமறிப்பு, தவறான உணவு பழக்கம், டென்ஷன்,பரம்பரைத்தன்மை தான் இதற்க்கு காரணங்கள்.

பொடுகு வந்தவர்கள் கவணிக்கவும்:

*வாரம் இரண்டு முறை தலைக்கு நல்ல ஷம்ப்பு அலது சியக்காய் போட்டு குளிக்கவும்.பொடுகு வந்த பின்பு தலையில் மிகுந்த அரிப்புகள் இருக்கும் அதனை விரல் நகம் வைத்து அதிகமாக சுரண்டக் கூடாது.

*கண்டகண்ட க்ரீம்களை தலைக்கு தேய்க்கக் கூடாது.அதிகமாக தண்ணீர் குடிக்கவும். எண்ணெய் அதிகம் உள்ள உணவு பண்டங்களை தவிர்க்கவும்.
முக்கியமாக டென்ஷன் இல்லாமல் இருக்கனும்.தலையணை உறைகள் மற்றும் தலையணையினை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

*சீப்பு, தலை துடைக்கும் டவல், ஹேர் ஹிளிப் தலைக்கு பயன்படுத்தும் அனைத்துமே தனியாக பயன்படுத்தவும்.சீப்பை 3 நாளுக்கு ஒரு முறை சூடு தண்ணீரில் போட்டு அலசிய பின்பு பயன்படுத்தவும்.

இதனை தடுக்க சில வழிகள்:

*குளிக்கும் முன்பு நன்றாக தலையில் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயினை தலையின் வேரில் பஞ்சினை வைத்து தேய்து நன்றாக ஊறிய பின்பு குளிக்கவும்.வாரம் ஒரு முறை ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும்..
எலூமிச்சை சாறு, அல்லது முட்டையின் வெள்ளை கரு அல்லது வெள்ளை முள்ளங்கி சாறு தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

கூந்தல் பவுடர்:

*4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய்விடும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum