தஞ்சை சுவாமிமலை
Page 1 of 1
தஞ்சை சுவாமிமலை
ஒருமுறை, படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் `படைப்புத் தொழில் செய்யும் உமக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா' என்று முருகப்பெருமான் கேட்டார்.
இந்த கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அவருடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டினார். மேலும் பிரம்மனை சிறையில் அடைக்கவும் செய்தார். பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார்.
பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் முறையிட்டு அவரை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். சிவபெருமானும் முருகப்பெருமானிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற... தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு இணங்க பிரம்மாவை விடுதலை செய்தார்.
இதை பார்த்து உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டார். முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார்.
இந்த அற்புத நிகழ்ச்சி நடந்த திருத்தலம்தான் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள சுவாமிமலை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படைவீடாக இந்த திருத்தலம் திகழ்கிறது. இங்குள்ள முருகப்பெருமானின் திருமேனியில் நாளும் அதிசயம் நிகழ்வதைப் பார்க்கலாம்.
அதாவது, அபிஷேகம் செய்யும்போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார். சந்தன அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருகிறார். மேலும், இக்கோவில் கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாணலிங்கமாகவும் காட்சி தருவது தனிச்சிறப்பு.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
இந்த கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அவருடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டினார். மேலும் பிரம்மனை சிறையில் அடைக்கவும் செய்தார். பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார்.
பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் முறையிட்டு அவரை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். சிவபெருமானும் முருகப்பெருமானிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற... தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு இணங்க பிரம்மாவை விடுதலை செய்தார்.
இதை பார்த்து உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டார். முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார்.
இந்த அற்புத நிகழ்ச்சி நடந்த திருத்தலம்தான் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள சுவாமிமலை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படைவீடாக இந்த திருத்தலம் திகழ்கிறது. இங்குள்ள முருகப்பெருமானின் திருமேனியில் நாளும் அதிசயம் நிகழ்வதைப் பார்க்கலாம்.
அதாவது, அபிஷேகம் செய்யும்போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார். சந்தன அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருகிறார். மேலும், இக்கோவில் கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாணலிங்கமாகவும் காட்சி தருவது தனிச்சிறப்பு.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுவாமிமலை நவரத்தினமாலை விரிவுரை
» சுவாமிமலை சுவாமிநாதன் கோயில்
» சுவாமிமலை நவரத்தின மாலை
» தஞ்சை பெரிய கோயில்
» திருச்செந்தூர், பழநி, திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை பாதயாத்திரைப் பாடல்கள்
» சுவாமிமலை சுவாமிநாதன் கோயில்
» சுவாமிமலை நவரத்தின மாலை
» தஞ்சை பெரிய கோயில்
» திருச்செந்தூர், பழநி, திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை பாதயாத்திரைப் பாடல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum