தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பனிக்கால சரும பராமரிப்பு

Go down

பனிக்கால சரும பராமரிப்பு                Empty பனிக்கால சரும பராமரிப்பு

Post  ishwarya Sat Feb 23, 2013 3:09 pm

பனிக்காலம் வந்து விட்டாலே உடலில் ஒரு வறட்சித் தன்மையும் வந்து விடுகிறது. சருமம் வறண்டு போகாமல் இருக்க ஆடிளைவரசளைநசகளை பயன்படுத்தலாம்.

குளிப்பதற்கு முன்பாக இலேசாக எண்ணை தடவிக் கொண்டு குளித்தால் குளித்த பின் தோலில் வறட்சியால் வரும் சுருக்கங்கள் தவிர்க்கப்படும்.

சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறும், சிறிதளவு தேனும் கலந்து குடிக்க புத்துணர்ச்சியாய் இருக்கும்.

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தின் உள்சூடு பாதுகாக்கபடும்.

கால்பாதம் வெடித்து விடுவது பனிக்காலங்களில் சகஜம். இதற்கு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைத்து நீரில் உப்பு சிறிது ஆலிவ் ஆயில் சேர்க்கவும்.

15 நிமிஷம் கழித்து ப்யூமிக்ஸ் கல்லில் நன்கு தேய்க்கவும். பிறகு பாதங்களை அழுந்தத் துடைத்து லேசாக க்ரீம் தடவவும். பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் நல்லது அது வாசிலைனுக்கு சமம். தோலுக்கு சிறந்த பாதுகாப்பு.

உதடுகளுக்கு அவ்வப்போது சிறிது வெண்ணை பூசவும். வாசிலைன் அல்லது உதடுகளுக்கென்றே உள்ள
பிரத்தியேகக் க்ரீம்களை பயன்படுத்தலாம்.

நிறைய பழங்கள், கேரட் சாப்பிடுவது உடல் வறட்சியை நீக்கும்.

சுடுநீர் அடிக்கடி குடித்தல் நலம்.

வெளியே பனியில் செல்ல நேர்ந்தால் முக்கியமாய் குழந்தைகளுக்கு காதுகளை மூடும் குரங்குக்குல்லா
போட வேண்டும்.

பெரியவர்கள் மப்ளர் கட்டிக் கொள்ளலாம். தலை காது வழியே பனி விரைவில் உடலுக்குள் சென்று உபாதை தரும். ஆகவே இப்படிச் செய்தால் வருமுன் காப்பது போலாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum