தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி விரிவாக்கம்

Go down

பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி விரிவாக்கம் Empty பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி விரிவாக்கம்

Post  meenu Mon Jan 14, 2013 1:32 pm

கேரள பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்ததர்கள் வருவது வழக்கம். இவ்வாண்டுக்கான மண்டலபூஜை வரும் 16ம் தேதி துவங்க உள்ளது.

சபரிமலை, பம்பை பகுதி களில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து இங்குள்ள பிரஸ்கிளப்பில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் எம்.ராஜகோபாலன் நாயர் கூறியதாவது:-

சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக, இன்சூரன்ஸ் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இத் திட்டம், எருமேலி-பம்பை வனத்தினூடே செல்லும் பாதை, குமுளி, சத்திரம், புல்மேடு, பாஞ்சாலிமேடு, பருத்துப்பாறா பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

சபரிமலையில், வியாபார நிறுவனங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, 6 ஏக்கர் பரப்பளவில் பக்தர்கள் ஓய்பெடுக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பையில் 3 ஓட்டல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே போல் சபரிமலை சன்னிதானத்திலும் ஓட்டல்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பாண்டித்தாவளம் பகுதியில், 30 ஆயிரம் சதுரடி பரப்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் ஒரு ஓட்டல், ஒரு இளநீர் கடை, சிற்றுண்டி சாலைகள் ஆகியவற்றிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் பல வியாபார நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காததன் மூலம் தேவஸ்வம் போர்டுக்கு இவ்வாண்டு 20 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்படும். பம்பை-சபரிமலை பாதையில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் கியூ காம்ப்ளக்ஸ் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு ராஜகோபாலன் கூறினார்.

அதிக நேரம் திறந்திருக்கும்.............

அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்தடையும் தினத்திலேயே, தரிசனம் முடிந்து திரும்ப வசதியாக கூடுதல் நேரம் நடை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அதிகாலை மூன்று மணிக்கு திறக்கப்படும் நடை, உச்சிக்கால பூஜைக்கு பின் மதியம் ஒரு மணிக்கு அடைக்கப்படும். பின்னர், பிற்பகல் 3 மணிக்குகு திறக்கப்படும்.

நடை இரவு 11.45 மணிக்கு அடைக்கப்படும். மண்டல பூஜைக்காக, சபரிமலை கோவில் நடை வரும் 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து, வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜைகள் என, சபரிமலை சீசன் கலைகட்டத் துவங்கி விடும். அரவணை, அப்பம் போன்ற பிரசாதங்களை விற்பனை செய்வதற்காக தற்போதுள்ள 12 கவுண்டர்களை விட, சன்னி தானம் மற்றும் மாளிகைபுறத்தம்மன் கோவில் அருகே புதிதாக 6 கவுண்டர்கள் துவக்கப்படும்.

சபரிமலை சன்னிதான பகுதியில், ராணுவத்தினரால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கட்டி முடிக்கப்பட்டுள்ள பெய்லி பலம் (நடை பாலம்) மூலம், பக்தர்கள் தரிசனம் முடிந்து விரைவாக வெளியேற வசதி ஏற்படுத்தப்படும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் புதிய அமைச்சரவை விரிவாக்கம்
»  திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பக்தர்களுக்கு எள் உருண்டை பிரசாதம்
»  திருமலைக்கு பஸ்சில் செல்லும் பக்தர்களுக்கு ஸ்மார்ட் கார்டு
» 27 கோடிக்கு மார்புகளை இன்சூரன்ஸ் செய்யும் ஹாலிவுட் நடிகை!
» இரவில் நடைசாத்திய பிறகும் சபரிமலையில் 18ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum