தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனிப்பு, புளிப்பு பழச் சுண்டல்

Go down

இனிப்பு, புளிப்பு பழச் சுண்டல் Empty இனிப்பு, புளிப்பு பழச் சுண்டல்

Post  ishwarya Tue Feb 19, 2013 12:24 pm

உலர்ந்த பச்சைப் பட்டாணி & 1 கப் (பெரியது), மீடியம் சைஸ் ஆப்பிள் அல்லது பேரிக்காய் & 1, உலர்ந்த திராட்சை & 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி துருவியது & 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் & 4 நறுக்கியது, பெருங்காயம், மிளகாய்த்தூள் & சிறிது, எண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து & அரை டீஸ்பூன், வறுத்து பொடித்த சீரகத்தூள் & அரை டீஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு & 1 டேபிள் ஸ்பூன், உப்பு& தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை & சிறிது நறுக்கியது, துருவிய மாங்காய் & 1 டேபிள் ஸ்பூன்.
பட்டாணியை 8 மணி நேரம் ஊறவைத்து பின் வேக வைக்கவும். இஞ்சி, ஆப்பிளை தோல் நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, பச்சை மிளகாய் கிள்ளிப் போட்டு, இஞ்சி சேர்த்து வதக்கியதும், மிளகாய்த்தூள், பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கவும்.

பின்னர் வெந்த பட்டாணி, உப்பு, துருவிய ஆப்பிள் போட்டு வதக்கி இறக்கவும். கொத்தமல்லி, திராட்சை, கறிவேப்பிலை, சீரகத்தூள், மாங்காய்த் துருவல், எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளறி பரிமாறவும்.

இது வித்தியாசமான வாசனையுடன் இனிப்பு, புளிப்புமாக இருக்கும். நவராத்திரிக்கு இது ஒரு ஸ்பெஷல் சுண்டல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum